search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் சம்பாதிப்பதில்தான் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். குறியாக உள்ளனர்- புகழேந்தி பேட்டி
    X

    பணம் சம்பாதிப்பதில்தான் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். குறியாக உள்ளனர்- புகழேந்தி பேட்டி

    கட்சியை காப்பாற்ற ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆட்சி செய்யவில்லை. பணம் சம்பாதிப்பதில் தான் அவர்கள் குறியாக உள்ளனர் என்று தினகரன் அணி நிர்வாகி புகழேந்தி குற்றம் சாட்டினார். #Pugazhenthi #opanneerselvam #edappadipalanisamy

    மதுரை:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமங்கலம் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கட்சியை காப்பாற்ற ஆட்சி செய்யவில்லை. பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக உள்ளனர்.

    தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் யாரும் அமைச்சர்கள் இல்லை. அனைவரும் ஜோக்கர்கள்தான். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் வாங்கினால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன்.


    ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தேர்தல் பிரசாரம் செய்தாலே நாங்கள் ஜெயித்து விடுவோம். இவர்களை யாரும் அமைச்சர்களாக பார்ப்பதில்லை. பொம்மைகளாகத்தான் பார்க் கின்றனர்.

    கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மணல் அள்ளப்படும் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதனை தட்டிக் கேட்டால் கத்தியை காட்டி மிரட்டப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Pugazhenthi #opanneerselvam #edappadipalanisamy

    Next Story
    ×