search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public School"

    • புதிய தொழில்நுட்பத்தில் “கிளாஸ் ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கி உள்ளனர்.
    • டிஜிட்டல் பஸ் ஆண்டுக்கு 5 ஆயிரம் குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2013-ம் ஆண்டு எம் நண்பர்கள் என்ற வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டது. இந்த குழு மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ்அப் குழுவின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமப்புற குழந்தைகளுக்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தில் "கிளாஸ் ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கி உள்ளனர்.

    இந்த டிஜிட்டல் பேருந்து முழு கணினி வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வகுப்பறைக்குள் 2 ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. 16 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்க 16 லேப்டாப் கம்ப்யூட்டர்கள், கீபேட், மவுஸ், சார்ஜர்கள், 16 சுழலும் நாற்காலிகள், 16 மடிப்பு மேஜைகள் உள்ளன. இதுதவிர ஆசிரியர்களுக்கு தனி கணினி, நாற்காலி, மேஜையும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் புரொஜெக்டர், விளக்கக்காட்சிக்கான டி.வி., மியூசிக் சிஸ்டம், மைக் சவுண்ட் சிஸ்டம், விளக்குகள், எல்இடி டிஜிட்டல் போர்டு ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. வைபை, ஆன்லைன் கல்விக்கான இணையம் ஆகியவையும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் கலர் பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் ஸ்கேனர் ஆகியவையும் உள்ளன.

    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைக்காக பேருந்து கதவு அருகே அதிநவீன பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 பேர் வரை அமரும் மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் வகுப்பறைக்குள் நுழைய 3 நுழைவாயில்கள் உள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பஸ் முழு வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.

     

    மேலும் இந்த பேருந்தில் 6.8 கே.வி. திறன் கொண்ட அதிநவீன ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கை கழுவுவதற்கு பஸ்சுக்கு மேல் 200 லிட்டர் தண்ணீர் தொட்டி, வாஷ் பேசின், 40 லிட்டர் குடிநீர் வசதி, இரண்டு ஏசி அவுட் டோர் யூனிட்கள், பேட்டரி பாக்ஸ், கருவி பெட்டி ஆகியவை உள்ளன. இந்த டிஜிட்டல் பஸ் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்கும். இந்த பஸ் மூலம் ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 மணிநேரம் பயிற்சி படிப்படியாக வழங்கப்படும். ஒரு நாளைக்கு நான்கு பள்ளிகளுக்குச் சென்று தலா ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை வகுப்பு நடத்தும். இதற்காகவே தனி பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இரண்டு கணினி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் மற்றும் ஒரு நடத்துநர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை டிஜிட்டல் பஸ் இயக்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகும்.

    இது குறித்து எம் பிரண்ட்ஸ் தலைவர் முகமது ஹனிப் கூறியதாவது:-

    வாட்ஸ்அப் குரூப் மூலம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இருந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுடன் போட்டி போட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். டிஜிட்டல் பஸ் ஆண்டுக்கு 5 ஆயிரம் குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

    • சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதினார்.
    • ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப் ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதங்கள் அனுப்பி உள் ளார்.

    இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில் "பரிக்சா பே சர்ச்சா" எனும் ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தி யாவிற்காக எனும் முகப்பு தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம் பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமரிடம் கடிதம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • பரமக்குடி அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

    பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் காசநோய் துணை இயக்குநர் ஜீவானந்தம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கழக இணைச்செயலாளர் காமராஜ், பரமக்குடி சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் சவுமிய நாராயணன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா இணைந்து செய்திருந்தார்.

    துணை முதல்வர்கள் அனில், கவிதா மற்றும் கே.சி. பொறுப்பாசிரியை கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

    பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
    • இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்க போட்டியில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ,பழனி ,திருப்பூர் ,கோவை,பல்லடம் தாராபுரம், மேட்டுப்பா ளையம்,அன்னூர் ஆகிய சி.பி.எஸ்.இ பள்ளிகளின் கூட்டமைப்பான கோவை கொங்கு சகோதயா பள்ளி காம்ப்ளக்சில் இடம்பெற்றிருக்கும் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேல் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கமல், பள்ளி முதல்வர் பிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×