என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "luxury bus"

    • விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம்.

    சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது. இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இதில் இடம் பெறுகிறது.

    ஆம்னி பஸ்களுக்கு இணையாக வாங்கப்பட்டு உள்ள வால்வோ பஸ் பொங்கலுக்கு பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புதிய தொழில்நுட்பத்தில் “கிளாஸ் ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கி உள்ளனர்.
    • டிஜிட்டல் பஸ் ஆண்டுக்கு 5 ஆயிரம் குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2013-ம் ஆண்டு எம் நண்பர்கள் என்ற வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டது. இந்த குழு மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ்அப் குழுவின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமப்புற குழந்தைகளுக்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தில் "கிளாஸ் ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கி உள்ளனர்.

    இந்த டிஜிட்டல் பேருந்து முழு கணினி வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வகுப்பறைக்குள் 2 ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. 16 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்க 16 லேப்டாப் கம்ப்யூட்டர்கள், கீபேட், மவுஸ், சார்ஜர்கள், 16 சுழலும் நாற்காலிகள், 16 மடிப்பு மேஜைகள் உள்ளன. இதுதவிர ஆசிரியர்களுக்கு தனி கணினி, நாற்காலி, மேஜையும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் புரொஜெக்டர், விளக்கக்காட்சிக்கான டி.வி., மியூசிக் சிஸ்டம், மைக் சவுண்ட் சிஸ்டம், விளக்குகள், எல்இடி டிஜிட்டல் போர்டு ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. வைபை, ஆன்லைன் கல்விக்கான இணையம் ஆகியவையும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் கலர் பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் ஸ்கேனர் ஆகியவையும் உள்ளன.

    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைக்காக பேருந்து கதவு அருகே அதிநவீன பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 பேர் வரை அமரும் மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் வகுப்பறைக்குள் நுழைய 3 நுழைவாயில்கள் உள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பஸ் முழு வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.

     

    மேலும் இந்த பேருந்தில் 6.8 கே.வி. திறன் கொண்ட அதிநவீன ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கை கழுவுவதற்கு பஸ்சுக்கு மேல் 200 லிட்டர் தண்ணீர் தொட்டி, வாஷ் பேசின், 40 லிட்டர் குடிநீர் வசதி, இரண்டு ஏசி அவுட் டோர் யூனிட்கள், பேட்டரி பாக்ஸ், கருவி பெட்டி ஆகியவை உள்ளன. இந்த டிஜிட்டல் பஸ் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்கும். இந்த பஸ் மூலம் ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 மணிநேரம் பயிற்சி படிப்படியாக வழங்கப்படும். ஒரு நாளைக்கு நான்கு பள்ளிகளுக்குச் சென்று தலா ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை வகுப்பு நடத்தும். இதற்காகவே தனி பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இரண்டு கணினி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் மற்றும் ஒரு நடத்துநர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை டிஜிட்டல் பஸ் இயக்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகும்.

    இது குறித்து எம் பிரண்ட்ஸ் தலைவர் முகமது ஹனிப் கூறியதாவது:-

    வாட்ஸ்அப் குரூப் மூலம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இருந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுடன் போட்டி போட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். டிஜிட்டல் பஸ் ஆண்டுக்கு 5 ஆயிரம் குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

    ×