மழலையருக்கான பட்டமளிப்பு விழா

பரமக்குடி அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மழலையருக்கான பட்டமளிப்பு விழா
Published on

பரமக்குடி

பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் காசநோய் துணை இயக்குநர் ஜீவானந்தம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கழக இணைச்செயலாளர் காமராஜ், பரமக்குடி சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் சவுமிய நாராயணன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா இணைந்து செய்திருந்தார்.

துணை முதல்வர்கள் அனில், கவிதா மற்றும் கே.சி. பொறுப்பாசிரியை கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com