search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public exam results"

    • 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
    • மாணவர்களுக்கு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

    தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ- மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.

    சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

    அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

    இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. #ICSEResult #ISCResult #CISCE
    புதுடெல்லி:

    இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 28 வரை நடைபெற்றது. ஐஎஸ்சி (12ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. https://www.cisce.org என்ற சிஐஎஸ்சிஇ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் குறியீட்டு எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

    10ம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வில் மும்பையைச் சேர்ந்த ஜுகி ரூபேஷ் கஜாரியா, முக்த்சாரைச் சேர்ந்த மன்ஹர் பன்சால் ஆகியோர் 99.60 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். 12ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வில் 100 சதவீத மதிப்பெண்களுடன் கொல்கத்தாவின் தேவாங் குமார் அகர்வால், பெங்களூருவின் விபா சுவாமிநாதன் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ICSEResult #ISCResult #CISCE
    ×