search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Sheikh Hasina"

    • ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
    • வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    "நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

    • 5 கி.மீ. இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது
    • இத்திட்டத்திற்காக இந்தியா சுமார் ரூ.155 கோடி வரை செலவிட்டுள்ளது

    இந்தியாவிற்கும் அண்டை நாடான வங்கதேசத்திற்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட்டு ரெயில் சேவை துவங்கப்பட உள்ளது.

    அகர்தலா-அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு ரெயில் சேவை (Agartala-Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது.

    இச்சேவை, இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா நகரிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது. இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும்.

    இந்த நீண்ட ரெயில் தடத்தில் 1 பெரிய பாலமும், 3 சிறிய பாலங்களும் அமைந்துள்ளன.

    இந்த சேவையின் மூலம் அகர்தலாவிலிருந்து ரெயில் வழியாக கொல்கத்தாவை அடைய தற்போது 31 மணி நேரம் எடுக்கும் பயண நேரம், 10 மணி நேரமாக குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்திய ரெயில்வே, தன் பங்கிற்கு சுமார் ரூ.155 கோடி வரை இதற்காக செலவிட்டுள்ளது.

    இந்த சேவையை நாளை மறுநாள் (நவம்பர் 1) இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11:00 மணியளவில் ஒன்றிணைந்து துவக்கி வைக்கின்றனர்.

    • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • இந்த பயணத்தில் இந்தியா வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார்.

    அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மோமன் கூறுகையில், வங்காளதேசம் தனது இலக்குகளை அடைவதற்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என தங்கள் நாடு நம்புவதாக கூறினார்.

    பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2019ம் ஆண்டு இந்தியா வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

    புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். #PulwamaAttack #SheikhHasina
    டாக்கா:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.



    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், ‘புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு உயிரிழந்த வீரர்களுக்கு வங்கதேச மக்கள் சார்பிலும், என் சார்பிலும், அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதைப்போல வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ஷரியர் ஆலமும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். #PulwamaAttack #SheikhHasina 
    வங்காளதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். #SheikhHasina
    டாக்கா:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகள் மோதின.

    மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வங்காளதேச பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 மந்திரிகள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. #SheikhHasina
    ×