search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Travel time"

    • 5 கி.மீ. இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது
    • இத்திட்டத்திற்காக இந்தியா சுமார் ரூ.155 கோடி வரை செலவிட்டுள்ளது

    இந்தியாவிற்கும் அண்டை நாடான வங்கதேசத்திற்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட்டு ரெயில் சேவை துவங்கப்பட உள்ளது.

    அகர்தலா-அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு ரெயில் சேவை (Agartala-Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது.

    இச்சேவை, இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா நகரிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது. இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும்.

    இந்த நீண்ட ரெயில் தடத்தில் 1 பெரிய பாலமும், 3 சிறிய பாலங்களும் அமைந்துள்ளன.

    இந்த சேவையின் மூலம் அகர்தலாவிலிருந்து ரெயில் வழியாக கொல்கத்தாவை அடைய தற்போது 31 மணி நேரம் எடுக்கும் பயண நேரம், 10 மணி நேரமாக குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்திய ரெயில்வே, தன் பங்கிற்கு சுமார் ரூ.155 கோடி வரை இதற்காக செலவிட்டுள்ளது.

    இந்த சேவையை நாளை மறுநாள் (நவம்பர் 1) இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11:00 மணியளவில் ஒன்றிணைந்து துவக்கி வைக்கின்றனர்.

    • எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்று அடையும்.
    • சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    ரெயில்வே வாரியம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந்தேதி ரெயில்களின் மாற்றப்பட்ட நேரத்தை கொண்ட புதிய கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020 முதல் 2021 வரை மூன்று ஆண்டுகள் புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி கோட்டத்தின் கீழ் இயக்கப்படும் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து ரெயில்களும் 5 முதல் 15 நிமிடங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர்-காரைக்கால் (வண்டி எண்.06832) ரெயில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூர்-திருச்சி (06683) ரெயில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறை-திருவாரூர் (06541) காலை 7.10-க்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு செனறு அடையும். திருவாரூர்-மயிலாடுதுறை (06688) காலை 8.15-க்கு புறப்பட்டு காலை 9.15-க்கு சென்றடையும்.

    திருவாரூர்- மயிலாடுதுறை (06542) இரவு 8.10 க்கு புறப்பட்டு இரவு 9.10 க்கு சென்று அடையும். மன்னார்குடி-திருப்பதி (17408) ரெயில் மாலை 5.10-க்கு புறப்பட்டு பிற்பகல 3.35-க்கு சென்றடையும். மன்னார்குடி- திருச்சி (06827) ரெயில் காலை 6.25-க்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்று அடையும். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி (16361) ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்று அடையும்.

    விழுப்பும்-மயிலாடுதுறை (06691) ரெயில் மாலை 6.25 க்கு புறப்பட்டு இரவு 9.40 க்கு சென்றடையும். தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (16866) இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (16865) ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை 5.10 மணிக்கு சென்றடையும்.

    மேற்கூறியதையும் சேர்த்து திருச்சி கோட்டத்தில் மொத்தம் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    ×