என் மலர்
செய்திகள்

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா பதவியேற்றார்
வங்காளதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். #SheikhHasina
டாக்கா:
வங்காளதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகள் மோதின.
மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வங்காளதேச பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 மந்திரிகள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. #SheikhHasina
Next Story