search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat polls"

    ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான 8-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 9 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 17-ம் தேதியில் இருந்து இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 73.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இன்று 8ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. 331 பஞ்சாயத்து தலைவர்கள், 2007 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்து அமைப்புகளில் 43 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 681 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 2633 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 361 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #JKPanchayatPolls

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு இன்று ஏழாவது கட்டமாக நடந்த தேர்தலில் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற ஏழாம்கட்ட தேர்தலில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.8 சதவீதம் வாக்குகள் பதிவானது. காஷ்மீர் பகுதியில் 30.3 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 75.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.



    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவதுகட்ட தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகளும், நான்காம்கட்ட தேர்தலில் 73.1 சதவீதம் வாக்குகளும், ஐந்தாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், ஆறாம்கட்ட தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    358 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1652 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.



    மொத்தம் 2773 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 727 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளில் 6 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1437 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற முதற்கட்டதேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது. #JKPanchayatPolls
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா வரும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் என குறிப்பிட்டுள்ளார். #BJPflag #PanchayattoParliament #AmitShah
    போபால்:

    விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட ஹோஷங்காபாத் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று பங்கேற்று பேசினார்.

    ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களும், எவ்வித அரசியல் பின்பலமும் இல்லாத ஏழை டீ வியாபாரியின் மகனும் பா.ஜ.கவில்தான் இந்த நாட்டின் பிரதமராக உயர முடியும் என அவர் குறிப்பிட்டார்.

    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தர வேண்டும். இந்த வெற்றியின் மூலம் வரும் 2019-க்கு பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாராளுமன்றம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்கள் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் என அம்மாநில வாக்களர்களை அவர் கேட்டுக் கொண்டார். #BJPflag #PanchayattoParliament #AmitShah
    மேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். #Panchayatpolls #violence
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதற்கிடையில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. அதே போல் பா.ஜ.க. தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட வந்த மக்களை கலவரக்காரர்கள் விரட்டி அடித்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

    மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதாகவும் எனவே உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ கோரிக்கை விடுத்து உள்ளார்.   #Panchayatpolls #violence
    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கை கொல்கத்தா ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #Panchayatpolls #violence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பரவலாக வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடியது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

    இந்நிலையில், சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் கலவரங்கள் காரணமாக, பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்தனர். வன்முறை கும்பலால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இன்று மாலை நிலவரப்படி தேர்தல் சார்ந்த மோதல்களில் 12 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடியாக பகிரப்பட்டதை கண்ட சில வக்கீல்கள் அந்த காட்சிகளை தங்களது கைபேசி மூலம் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதிகளிடம் காட்டினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் வக்கீல்கள் யாராவது இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜோதிர்மாய் பட்டாச்சாரியா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

    மனுதாரர்களின் புகார்கள் தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலாளர் மற்றும் அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  #Panchayatpolls #violence
    ×