என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர் 7-வதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று 75.3 சதவீதம் வாக்குப்பதிவு
Byமாலை மலர்4 Dec 2018 3:12 PM GMT (Updated: 4 Dec 2018 3:12 PM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு இன்று ஏழாவது கட்டமாக நடந்த தேர்தலில் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Kashmirpanchayatelection
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற ஏழாம்கட்ட தேர்தலில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.
கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவதுகட்ட தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகளும், நான்காம்கட்ட தேர்தலில் 73.1 சதவீதம் வாக்குகளும், ஐந்தாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், ஆறாம்கட்ட தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.
இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற ஏழாம்கட்ட தேர்தலில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.
இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.8 சதவீதம் வாக்குகள் பதிவானது. காஷ்மீர் பகுதியில் 30.3 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 75.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.
கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவதுகட்ட தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகளும், நான்காம்கட்ட தேர்தலில் 73.1 சதவீதம் வாக்குகளும், ஐந்தாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், ஆறாம்கட்ட தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.
இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X