search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata HC"

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #HinduPakistan #ShashiTharoor
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

    இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் டுவிட்டர் மூலம் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #HinduPakistan #ShashiTharoor
    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கை கொல்கத்தா ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #Panchayatpolls #violence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பரவலாக வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடியது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

    இந்நிலையில், சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் கலவரங்கள் காரணமாக, பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்தனர். வன்முறை கும்பலால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இன்று மாலை நிலவரப்படி தேர்தல் சார்ந்த மோதல்களில் 12 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடியாக பகிரப்பட்டதை கண்ட சில வக்கீல்கள் அந்த காட்சிகளை தங்களது கைபேசி மூலம் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதிகளிடம் காட்டினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் வக்கீல்கள் யாராவது இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜோதிர்மாய் பட்டாச்சாரியா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

    மனுதாரர்களின் புகார்கள் தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலாளர் மற்றும் அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  #Panchayatpolls #violence
    ×