search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FB"

    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    2018-ம் ஆண்டின் சமூகவலைத்தள பயன்பாட்டை வைத்து ஒரு புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை விஞ்சி உலகின் சிறந்த சமூக தகவல்தொடர்பு வலைத்தளமாக பதிவானது. இது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அப்ளிகேசன் என்றாலும் அது பேஸ்புக்கை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

    கடந்த 2 வருடங்களில் வாட்ஸ்ஆப் பயன்பாடு 30 சதவீத அளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.

    மாதாந்திரம் தொடர்ந்து பயன்படுத்தும் ‘ஆக்டிவ்’ பயனாளர்களின் அடிப்படையில் வாட்ஸ்-ஆப் மெஸேஞ்சரில் பேஸ்புக்கைவிட அதிகமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செயல்பாட்டில் உள்ளனர்.

    பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமும் 2017-2018 காலத்தில் 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

    பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெஸேஞ்சர் வலைத்தளங்கள் கடந்த 2 வருடங்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நேரம் கடந்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகும்.

    சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை ரசிப்பதும். பகிர்வதும் பெருகி உள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்றவை அதிகம் பிரபலமான வீடியோ காட்சி பகிர்வுத் தளங்களாக தெரியவந்துள்ளன.

    இந்தியாவில் வாட்ஸ்ஆப் மெஸேஞ்சர் தளம் அதிக பயன்பாட்டில் முதலிடத்தையும், அடுத்ததாக இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளன.

    அமெரிக்காவில் ஸ்னாப்சாட் தளம் முதலிடம் பிடித்திருக்கிறது.

    இலவச போன் அழைப்பு, இலவச மெஸேஜ் மற்றும் தொடர்பு எண் மூலம் தகவல் பரிமாற்றம் ஆகியவை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளன. மேலும் ‘என்ட் டூ என்ட் என்கிரிப்டடு’ பாதுகாப்பு அம்சமும் அதன் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். #Facebook #messenger



    ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...

    பேஸ்புக் தகவல்களில் உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளிக்காதீர்கள்.

    இன்டர்நெட் சென்டர்கள், கல்லூரி, நண்பர்களின் கணினிகள் மூலம் பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்தால், வேலை முடிந்ததும் லாக் அவுட்செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் பேஸ்புக் கணக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்.

    உங்களுடைய போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவிடும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நட்பு வட்டாரங்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக் செட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.



    நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள், தற்போது எங்கே இருக்கிறீர்கள் என உங்கள் சொந்த விஷயங்களை பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் தம்பட்டம் அடிக்காதீர்கள்

    தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்காதீர்கள். புள்ளிவிபரங்களின் படி பேஸ்புக்கில் உள்ள ஓவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 130 நண்பர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 130 பேரில் உங்களுக்கு எத்தனை பேரை நீங்கள் நேரில் சந்தித்த அனுபவம் உள்ளது? என்பதை அறிந்து பின்னர் அவர்களை மட்டும் பின்தொடருங்கள்.

    உங்கள் குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். குறிப்பாக சிறிய குழந்தைதானே என ஆடை அணியாத உங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிட வேண்டாம்.

    பேஸ்புக்கில் உள்ள உங்கள் நட்பு வரிசையை அனைவரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக்கில் வைக்காதீர்கள்.

    உங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள், ஆபாச புகைப்படங்கள், வீடியோ அனுப்பும் நபர்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்யுங்கள். உங்கள் சக நண்பர்களிடமும் சொல்லி அந்த குறிப்பிட்ட நபரை ரிப்போர்ட் செய்ய சொல்லுங்கள்.
    பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #HinduPakistan #ShashiTharoor
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

    இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் டுவிட்டர் மூலம் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #HinduPakistan #ShashiTharoor
    ×