search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter killed"

    • அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தென் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52). பெயிண்டர். இவருக்கு ஆகாஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் சின்னசேலத்திற்கு பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு தினமும் சென்று வருவார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை தென் பொன்பரப்பி கிராமத்தில் இருந்து சின்ன சேலத்திற்கு இரு சக்கர வாகனத்தில் ராஜேந்திரன் சென்றார்.அவர் அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    பின்னர் அருகில் இருந்த வர்கள் ராஜேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ன சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப் பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இது குறித்து ராஜேந்திர னின் மகன் ஆகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்.

    • திருமங்கலம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் முனுசாமி (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரலட்சுமி, 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமி மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் பலியானார்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 65). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    ரெட்டியார்பாளையம் கணபதி நகரில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வீரப்பன் ஓட்டி சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட வீரப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீரப்பனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வீரப்பன் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான வீரப்பனுக்கு ராணி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடுமலையில் காதல் தோல்வி அடைந்த பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடுமலை:

    உடுமலை எஸ்.சி.புரம். கண்டிய கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 25). இவர் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி னார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முருகவேலுவும் ஒரு பெண்ணும் காதலித்து வந்ததும் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகவேல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காதலி நினைவாகவே இருந்தார். பெண்ணின் பெற்றோரிடம் சென்று ஏன் உங்கள் பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்தீர்கள் என்று சத்தம்போட்டு புலம்பி வந்தார். இந்நிலையில் முருகவேல் இரும்பு பைபால் அடித்துக்கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×