search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Overpass"

    • கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மேம்பாலம் விரைவில் கட்டப்படும்.
    • அமைச்சர் எ.வ.வேலு கூட்டத்தில் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை முனிச்சாலை பகுதியில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி–வேல் தியாகராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்தி–ராணி, பொன் வசந்த் ஆகி–யோர் ஆய்வு மேற்கொண் டனர்.

    அதனைத் தொடர்ந்து வருகிற (ஜூலை) 15-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரால் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிரு–பர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறி–யதாவது:-

    கடந்த 11.1.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா–லின் ஆய்வு மேற்கொண்டு ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைப்ப–தற்காக ஆணை பிறப்பித் தார். பின்னர் இந்த நூலகம் அமையும் இடத்திற்கு ஒன் றுக்கு மூன்று முறை நேரில் முதல்வர் ஆய்வு செய்து இறுதியாக ரூ.134 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டிடம் அமைக்கப்படுகிறது.

    மேலும் இந்த நூலகத்தில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு பர்னிச்சர் கள், ரூ.5 கோடிக்கு கணினி வசதிகள் செய்யப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.215 கோடி மதிப்பீட்டில் தென் பகுதி மக்களின் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைகிறது. அண்ணா நூற் றாண்டு விழாவின் போது சென்னை கோட்டூர்பு–ரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்ணா நூற் றாண்டு நூல–கத்தை திறந்து வைத்தார்.

    தற்போது முதல்வர் மு.க.–ஸ்டாலின் 5 முறை தமிழ–கத்தை ஆண்ட கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மது–ரையில் கலைஞர் நூற் றாண்டு நூலகத்தை வரும் ஜூலை 15-ந்தேதி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மக்களை சந்திக் கும் வகையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடை–பெறுகிறது.

    அதற்கான ஆயத்த பணி–களை ஆய்வு செய்வதற்காக தற்போது இறுதியாக வந்து உள்ளோம். இந்த கட்டிடப் பணிகள் ஜூலை 10-ந்தேதி–யுடன் நிறைவு பெற்று மீத–முள்ள ஐந்து நாட்கள் நிகழ்ச்சி நடத்துவது சம்பந்த–மான வேலைகள் நடைபெ–றும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசும் போது, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையை பெருமைப்படுத்தும் வகை–யில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா–நிதி மதுரை மாநகராட்சியாக அறிவித்தார். மேலும் பல திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்தார் என்றும், அதேபோல் மதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை கொடையாக அளித் தார் என்று சொல்வதற்கு பதிலாக தவறான வார்த் தையை உபயோகப்படுத்தி விட்டேன், உணர்ச்சி வசப் பட்டு விட்டேன்.

    அதற்காக இப்பொழுது நான் வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதுரை–யில் கோரிப்பாளையம் பகுதியில் ஒரு மேம்பாலமும், மதுரை அப்போலோ மருத்துவமனை அருகே ஒரு மேம்பாலமும் நிச்சயமாக வர இருக்கிறது. மதுரை நெல்பேட்டையில் இருந்து ஒரு மேம்பாலம் கட்ட முடிவு செய்தோம். ஆனால் அந்தப் பகுதி மிக குறுவலான பகுதியாக இருப்பதினால் அதிகமான கட்டிடங்களை எடுக்க நேரிடும் என்பதால் இப்பகுதியில் உள்ள மக்கள் வியாபாரிகள் பாலம் கட்டும் பணியினை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் சாலைகளை பெரிது படுத்த நடவடிக்கை–கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தொடர்ந்து மதுரை வைகை ஆற்றுச்சாலையை இணைக்கும் சாலைகள் விரைவில் நடைபெற இருக்கி–றது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, ஆன்மீகத் துக்குள் தான் திராவிடம் இருக்கிறது என்று கூறி–னேன். அது ஒன்றும் தவ–றில்லை, காரணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி–யில் தான் தமிழகத்தில் அதி–கமான கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது என்றும் மேலும் பல கோவில் திருப்பணிகளை தி.மு.க. அரசு செய்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    முன்னதாக இந்த ஆய்வு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்தி–ராணி, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
    • ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன.

    இதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நீடித்து வருகிறது.

    சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றன.

    காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெருங்களத்தூரில் கட்டப் பட்டு உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து பெரும்பாலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் வாகன போக்குவரத்து எளிதாகும் வகையில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்து உள்ளன. ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    இதில் 6 வழித்தடங்கள் அமைய உள்ளன. பெருங்களத்தூரில் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கசாவடியை தாண்டி இந்த பாலம் முடிவடையும். இதற்கான பணியை அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது.

    இந்த மேம்பாலப் பணி முடிவடையும் போது தாம்பரம்-செங்கல்பட்டு இருவழித்தடத்திலும் குறைந்த நேரத்தில் விரைவாக வாகனங்களில் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயண நேரம் குறையும்.

    மேம்பாலத்தில் கிளாம் பாக்கம் பஸ் நிலையம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி, மகேந்திரா சிட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் படிகள் அமைய இருக்கிறது. வாகனங்கள் சுமார் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் பாலம் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் செங்கல்பட்டு- திண்டிவனம், ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கப் பணியும் நடைபெற உள்ளது. 67.1 கி.மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை தற்போது 4 வழிச் சாலையாக உள்ளது. இதில் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு இந்த சாலையை மேம்படுத்த தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது:- ஜி.எஸ்.டி. சாலையில் 94 கி.மீட்டர் தாம்பரம்- திண்டிவனம் பாதைக்கான விரிவாக்க திட்ட அறிக்கை நிறை வடைந்து உள்ளது. இதில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இந்த வழித்தடத்துக்கான கட்டுமான பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்றார்.

    தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமையும்போது லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சுமார் 50 சதவீத வாகனங்கள் உயர்த்தப்பட்ட மேம்பால சாலையில் செல்லும் வகையில் மாறும். இதனால் வாகன நெரிசலும், விபத்துக்களும் குறையும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 12 இடங்கள் விபத்து அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய பாலத்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல் திண்டிவனம் வரையிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, சாரம் கிராமம் பகுதிகளில் 6 வழிச்சாலையுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டு இருக்கிறது. மேல்மருவத்தூர், மற்றும் அச்சரப்பாக்கத்தில் தற்போது உள்ள சுரங்கப்பாதைக்கு மேல் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதேபோல் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் வரை 23.2 கி.மீட்டர், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கி.மீட்டர், திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திருச்சி- துவாக்குடி 14 கி.மீட்டருக்கு உயர்த்தப் பட்ட மேம்பாலம் அமைக்கவும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முன் மொழிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்.
    • தொடர் முயற்சி எடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி வழியாக வெம்பக்கோட்டை வரை செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இங்கு அடிக்கடி ரெயில்கள் கடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

    எனவே ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அப்போதைய அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது.

    அப்போது ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கப் பாண்டியன் மேம்பாலத்தை கட்டிமுடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் எடுத்த முயற்சியால் மேம்பால பணிகள் வேகமெடுத்தன. பல இடையூறுகளுக்கு இடையே ராஜபாளையம்-சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தற்போது 99 சதவீதம் முடிந்ததுள்ளன.

    இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பொது மக்கள் வாகனங்கள் ஓட்டி யும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். புதிய மேம்பா லத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். விரைவில் புதிய ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முறையாக திறந்து வைப்பார் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிகளை முடிக்க தொடரும் முயற்சிகளை எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது.
    • தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட குயிலா பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் புதுச்சேரி- தமிழக பகுதி களை இணைக்கும் பாலமாக அமைந்து வருகிறது.கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் குயிலாபாளையம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர் மழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு அதிகப்படியாக மழை நீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குயிலாபாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வனத்தாம்பா ளையம், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் தரைப்பாலம் மூழ்கி வெள்ளம் செல்வதால் அவ் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பல கிலோ மீட்டர் சுற்றி வேலைக்கு செல்வதாகவும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பயந்து வீட்டிலே விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு குயிலா பாளையம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றங்கரையில் மேம்பா லங்கள் அமைத்து அப்பகுதி மக்களுடைய பாதுகா ப்பையும் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • கண்டமங்கலம் அருகே மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டும் பணி அமைச்சர் பொன்முடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • ஏரி மற்றும் குளங்களுக்கு சென்று நீர் ஆதாரம் சேமிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், வடவாம்பலம்- ஜெகநாதபுரம் சாலை மலட்டாற்றின் குறுக்கே மற்றும் ரங்கா ரெட்டிபாளையம் சாலை மலட்டாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ. க்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடி தலைமைதாங்கி 2 உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நகரப்பகுதிகளை போன்றே கிராமப்புறங்களிலும் சாலை வசதி மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்திட வேண்டும் என உத்தர விட்டிருந்தார்கள். இதன் மூலம், அப்பகுதியினை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்திடலாம் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், விவசாயத் தொழிலும் வளர்ச்சி பெறும். மேலும், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும். முக்கியமாக மழைக்காலங்களில் உருவாகும் வெள்ளநீர் கிராமப்பகுதிகளில் சூழாமல் உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று உரிய ஏரி மற்றும் குளங்களுக்கு சென்று நீர் ஆதாரம் சேமிக்கப்படும்.

    அதனடிப்படையில், இன்று நபார்டு நிதியுதவி திட்டத்தின்கீழ், வடவாம்பலம்- ஜெகநாதபுரம் சாலை மலட்டாற்றின் குறுக்கே ரூ.3.39 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் ரங்காரெட்டிபாளையம் சாலை மலட்டாற்றின் குறுக்கே ரூ.6.65 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் 2 உயர்மட்டப்பாலம் கட்டு வதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற் ெபாறியாளர் வெண்ணிலா, கண்ட மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் குகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×