search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழை எதிரொலியால்  குயிலாப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது:  போக்குவரத்து துண்டிப்பு
    X

    குயிலாப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்வதை படத்தில் காணலாம்.

    கனமழை எதிரொலியால் குயிலாப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு

    • 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது.
    • தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட குயிலா பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் புதுச்சேரி- தமிழக பகுதி களை இணைக்கும் பாலமாக அமைந்து வருகிறது.கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் குயிலாபாளையம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர் மழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு அதிகப்படியாக மழை நீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குயிலாபாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வனத்தாம்பா ளையம், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் தரைப்பாலம் மூழ்கி வெள்ளம் செல்வதால் அவ் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பல கிலோ மீட்டர் சுற்றி வேலைக்கு செல்வதாகவும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பயந்து வீட்டிலே விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு குயிலா பாளையம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றங்கரையில் மேம்பா லங்கள் அமைத்து அப்பகுதி மக்களுடைய பாதுகா ப்பையும் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    Next Story
    ×