search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nursing student suicide"

    • கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
    • பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் நகை செய்யும் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 21).

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரகொண்டா பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

    மேலும் பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பெற்றோருக்கு கார்த்திகா தேவி போன் செய்துள்ளார். நேற்று பெற்றோர் சென்று கார்த்திகா தேவியை குடியாத்தம் அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் உள்ள அறையில் பேன் கொக்கியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் கார்த்திகாதேவி தொங்கினார்.

    கார்த்திகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் கார்த்திகா தேவியை பரிசோதித்தனர். அப்போது கார்த்திகா தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூரில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கூடப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் கலியவரதன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பச்சையம்மாள் (வயது 19). பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.

    கலியவரதனுக்கும், லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அதேபோல் கடந்த 20-ந்தேதியும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை கண்ட பச்சையம்மாள் மனவேதனை அடைந்து வீட்டு மாடிக்கு சென்று ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

    இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கலியவரதனும், லட்சுமியும் பச்சையம்மாளை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பச்சையம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருபுவனை அருகே நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே கலிதீர்த்தாள் குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் உளுந்தூர்பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமாவதி. இவர்களது மூத்த மகள் சிந்துஜா. (வயது 18). இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தொடக்கத்தில் இருந்தே சிந்துஜாவுக்கு நர்சிங் படிக்க விருப்பம் இல்லை. இதனை பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் ஏற்காமல் கட்டாயப்படுத்தியதால் சிந்துஜா விருப்பமின்றி படித்து வந்தார். 

    இந்த நிலையில் மன உளைச்சலுடன் கல்லூரிக்கு சென்று வந்த சிந்துஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பிரேமாவதி, மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துஜாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சிந்துஜா பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகிறார்.
    சேலம் அம்மாப்பேட்டை நர்சிங் மாணவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த மாறன் (வயது 53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

    இவர்களது 4-வது மகள் சங்கவி (16) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் சாந்தி தனது 2 மகள்களுடன் சேலம் அம்மாப்பேட்டையில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி சங்கவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு சாந்தி எடுத்து சென்றார். அப்போது உறவினர்களிடம் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறினார்.

    ஆனால் அதனை நம்பாத சாந்தியின் கணவரின் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாப்பேட்ட போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவரே தூக்கில் தொங்கினாரா? என்பது தெரியவரும் என்றும் ஏற்கனவே 2 முறை மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சாந்தியின் கணவரின் உறவினர்கள் சாந்தி மகளை கொன்று விட்டு நாடகமாடுகிறார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு நீடித்து வருகிறது.

    செந்துறை அருகே நர்சிங் மாணவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை, 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் மாலதி(வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாலதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். 

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது தொடர்பாக இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×