search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை
    X

    குடியாத்தத்தில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

    • கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
    • பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் நகை செய்யும் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 21).

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரகொண்டா பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

    மேலும் பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பெற்றோருக்கு கார்த்திகா தேவி போன் செய்துள்ளார். நேற்று பெற்றோர் சென்று கார்த்திகா தேவியை குடியாத்தம் அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் உள்ள அறையில் பேன் கொக்கியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் கார்த்திகாதேவி தொங்கினார்.

    கார்த்திகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் கார்த்திகா தேவியை பரிசோதித்தனர். அப்போது கார்த்திகா தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×