search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national level"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது
    • 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளிஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை சார்பாக சமூக அறிவியல் ஆய்வுகளின் மாதிரிகளை வடிவமைத்தல் மற்றும் புள்ளியில் கருவிகளைத் தீர்மானித்தல் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

    முதல் நாள் கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர்- முதுகலை வணிகவியல் துறைத் தலைவி அமுதாராணி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி, தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மதுரை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் வணிகவியல் உதவிப்பேராசிரியர் வள்ளி தேவசேனா தொடக்க உரையாற்றினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் தன்னாட்சி கல்லூரி, உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் செல்வகுமாரை, 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி அழகுலட்சுமி அறிமுகம் செய்தார்.

    முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் லட்சுமணகுமார், தொழில்நுட்ப அமர்வின் சிறப்பு விருந்தினரான, புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுத் துறை பேராசிரியர், காசிலிங்கத்தை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்விற்குத் தேவைப்படும் விளக்கமான புள்ளி விவரம் மற்றும் கோட்பாட்டை விளக்கினார்.

    2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினரான வணிகவியல் நிதி கணக்கியல் பள்ளியின் உதவிப்பேராசிரியர் சுரேசை, உதவிப்பேராசிரியர் சதீஸ்குமார் அறிமுகம் செய்தார். தொழில்நுட்ப அமர்வின் தலைமை விருந்தினராக மாலினியை, முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை தங்கபாண்டிஸ்வரி அறிமுகம் செய்தார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் வணிகவியல் துறை தலைவர் குருசாமி, இணைப்பேராசிரியர் மற்றும் நிறும செயலரியல் துறை தலைவர் செந்தில்குமார், கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் ஆர்சாக்ரடீஸ், ஆகியோர் ஆராய்ச்சி கட்டுரை வழங்கல் அமர்விற்கான அறிக்கையாளர்களாக செயல்பட்டனர். மொத்தம் 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு காளீஸ்வரி குழும இயக்குநர் சண்முகராஜ், சான்றிதழ்கள் வழங்கினார். 2 நாள் நடந்த தேசிய கருத்தரங்கில் 18 ஆய்வு அறிஞர்கள், 25 பேராசிரியர்கள் மற்றும் 256 மாணவர்கள் 11 கல்லூரிகளில் இருந்து பங்கேற்று பயனடைந்தனர்.

    • அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.
    • இதில், ‘2047-ல் இந்தியா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.

    ஈரோடு, செப். 18-

    ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணி ப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில், '2047-ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.

    போட்டிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பங்கேற்கலாம். இரு பிரிவினரும் இன்லாண்ட் லெட்டர், என்வலப் லெட்டரில் ஏதாவது ஒன்றில் கடிதம் எழுதலாம். என்வல பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லாண்ட் லெட்டர் பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.

    கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும் ஏற்கப்படும். எழுதப்பட்ட கடிதத்தை 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை –600 002' என்ற முகவரிக்கு, 'Dai Akhar' அஞ்சல் துறை கடித போட்டி–2022–23 என குறிப்பிட்டு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் வழங்கலாம். கடிதங்களை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசாக தலா 25,000, 10,000, 5,000 ரூபாய், தேசிய அளவில் வெற்றி பெறும் கடிதங்களில் முதல் 3 பரிசாக 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும்.

    போட்டியாளர்கள் தங்கள் கடிதத்தில் 2022 ஜனவரி, 1-ன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்உடையவர் என்ற சான்று இணைத்து அனுப்ப வேண்டும்.

    மாநில அளவில் பரிசு பெறும் 3 கடிதங்களின் விபரம் வரும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி அறிவிக்க ப்படும். பின், தேசிய அளவில் பரிசு பெறும் கடிதம் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது.
    • முதல் பரிசான தங்கப் பதக்கத்தை மாணவிகள் வென்றனர்.

    திருப்பூர் :

    தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவிகளான சத்யா, நிஷாந்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவரும், தாளாளருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பிவிஎஸ் பி.முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே எம்.கந்தசாமி, இணை செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர்.
    • டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஹரியானா மாநிலம் சண்டிகர் மாவட்டம் பஞ்சகுல்லாவில் கேலோ இந்தியா போட்டி நடந்தது. 13 மாநிலங்களை சேர்ந்த 231 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 25 பேர் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 11 பேர் கலந்து கொண்டனர். இதில் சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர். சுவேதா வெள்ளி வென்றார். இன்பதமிழன், யுவனேஸ்வர், பத்மேஷ்ராஜ், ஜூவா, செகுவரா, சுவேதா, திவ்யதர்ஷினி, சுருதி ஆகிய 8பேர் வெண்கலம் வென்றனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம், களரி பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றினர்.கேலோ இந்தியாபோட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தலைமையில் அக்கட்சியினர், டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • தேசிய அளவில் தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது என மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினரார்.
    • கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டம் முடிந்ததும் மகளிர் ஆணையத் தலைவர் குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெற்றது. அதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தற்போது குழந்தைத் திருமணம் மிகவும் குறைந்துள்ளது. பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் புகார் அதிகம் எழுந்தது.

    இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, பள்ளிகளில் பாலியல் சீண்டல் புகார் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வன்முறை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×