என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய களரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க திருப்பூரில் உற்சாக வரவேற்பு
- சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர்.
- டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர் :
ஹரியானா மாநிலம் சண்டிகர் மாவட்டம் பஞ்சகுல்லாவில் கேலோ இந்தியா போட்டி நடந்தது. 13 மாநிலங்களை சேர்ந்த 231 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 25 பேர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 11 பேர் கலந்து கொண்டனர். இதில் சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர். சுவேதா வெள்ளி வென்றார். இன்பதமிழன், யுவனேஸ்வர், பத்மேஷ்ராஜ், ஜூவா, செகுவரா, சுவேதா, திவ்யதர்ஷினி, சுருதி ஆகிய 8பேர் வெண்கலம் வென்றனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம், களரி பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றினர்.கேலோ இந்தியாபோட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தலைமையில் அக்கட்சியினர், டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்