search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohini"

    தமிழ் சினிமாவில் 16 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா, திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே இருக்கிறார்.

    தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டி நடக்கிறது. சமூகம், பேய், திரில்லர், வழக்கமான கதாநாயகி என்று எல்லாம் கலந்து நடிக்கிறார் நயன்தாரா.

    ஆனால் திரிஷாவோ இந்த போட்டியில் சற்று பின் தங்கி உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நாயகி, மோகினி ஆகிய 2 பேய் படங்களுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் இனி பேய் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.



    கதைத் தேர்விலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திரிஷா தன் வேலைகளை எப்படி அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை அனிமே‌ஷன் கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
    ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மோகினி' படத்தின் விமர்சனம்.
    பிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.

    தனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண்டுமென்றால், த்ரிஷா தன்னுடன் லண்டன் வந்து தனக்கு சமையல் பற்றி கற்றுத்தர வேண்டும் என்று யோகி பாபு கூறுகிறார். தனது தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க லேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சாமிநாதன் லண்டன் செல்கின்றனர். 



    அங்கு நாயகன் ஜாக்கி பக்னானியுடன் த்ரிஷாவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அவர்களது நெருக்கம் காதலாகவும் மாறவிடுகிறது. இந்த நிலையில், த்ரிஷா உள்ளிட்ட அவர்களது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு த்ரிஷாவுக்கு ஓர் அதிசய சங்கு கிடைக்கிறது. 

    ஒருநாள் அந்த சங்கை த்ரிஷா ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேய் புகுந்து அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்ற சில கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. 

    கடைசியில் த்ரிஷா உடலில் புகுந்த அந்த பேய் யார்? எதற்காக கொலைகளை செய்கிறது? அதன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் முதல் படம் இது. படத்தை தனது தோள்களில் தூக்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொடூரமான பேய்களுக்கு மத்தியில் அழகு பேயாக வந்து ரசிகர்களை கவர்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் ஜோடியாக வரும் ஜாக்கி பக்னானி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகி பாபு காமெடி அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள். 

    லண்டனில் கொலை செய்யப்படும் பெண், த்ரிஷாவை லண்டன் வரவைத்து த்ரிஷா மூலமாக தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்குவதை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் ஆர்.மாதேஷ். சாதாரணமாக த்ரிஷா அழகு என்பது நமக்கு தெரியும். பேயாகவும் முழு மேக்கப்புடன் அழகாகவே வருகிறார். பேயிலும் அழகான பேயாக வந்து செல்கிறார். த்ரிஷாவை கொடூரமாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இடமில்லாமல் லண்டன் சென்று பேய் படத்தை எடுத்திருக்கிறார்கள். மற்றபடி ஓரளவுக்கு படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 



    அருள்தேவ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. விவேக் - மெர்வினின் பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `மோகினி' அழகான பேய். 

    செய்தித்தாளை திறந்தாலே குழந்தைகளுக்கான அநீதி பற்றிய செய்திகள் தான் இருக்கிறது என்றும், அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும் என்றும் த்ரிஷா வேதனை தெரிவித்துள்ளார். #Trisha
    மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் மாதேஷ் பேசியதாவது,

    இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா  நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. 

    இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளோம் என்றார்.



    த்ரிஷா பேசும்போது,

    நான் இந்த படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான். தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால், அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். 

    மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை லண்டன், பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம் என்றார்.

    படம் வருகிற ஜுலை 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Mohini #Trisha

    ×