என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sb velumani"

    • நமக்கு எதிரி தி.மு.க. தான்.
    • நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார்.

    சென்னை:

    வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கள ஆய்வு கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் வில்லிவாக்கம் பாபா நகரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தி.மு.க. மைனாரிட்டியாக தான் இருந்தது. அதன் பின் தி.மு.க.வுக்கு ஓட்டு போட மக்கள் தயாராக இல்லை. இப்போது கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

    2010ல் அற்புதமான கூட்டணியை புரட்சித் தலைவி அம்மா அமைத்தார். தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார். புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பின் எடப்பாடியார் நான்கு வருடம் இரண்டு மாதம் அற்புதமான ஆசி கொடுத்தார்.

    திமு.க.வின் நான்கு ஆண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டம் வந்திருக்கிறதா? கடுமையான வறட்சி காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆனவுடன் அம்மா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினார்.

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக எப்போது வருவார் என பொதுமக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்தியாவிலேயே 7-வது பெரிய கட்சி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தைரியம் இருந்தால் தனித்து நின்று அ.தி.மு.க.வுடன் போட்டியிட தயாரா? யார் வெல்வார்கள் என்று பார்ப்போம். தைரியம் இருந்தால் இதற்கு தி.மு.க. பதில் சொல்லட்டும் பார்ப்போம்.

    புரட்சித் தலைவி அம்மா சாதாரண உறுப்பினர்களை கூட தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ., அமைச்சர் என பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தார்.

    சாதாரணமானவர்களுக்கு கூட நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி கொடுத்த கட்சி அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக பொறுப்பேற்பதற்கு அம்மா தான் காரணம்.

    அம்மா வழியில் எடப்பாடியார் நமக்கு வழி வகுத்துள்ளார். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. நமக்கு எதிரி தி.மு.க. தான். அதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக களப் பணியாற்றுங்கள்.

    நம்மை வெல்ல யாரும் கிடையாது. யார் என்ன செய்தாலும் 2026-ல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். #coimbatorestudentdeath

    கோவை:

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த சம்பவம் எதிர்பாராத செயல். மிகவும் வருந்தத்தக்கது. டி.வி.க்களில் வெளியான வீடியோவை பார்க்கும் போது, அந்த கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்ட லோகேஸ்வரி மாடியில் இருந்து கீழே குதிக்கவே தயங்குவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவருக்கு கீழே குதிக்க விருப்பம் இல்லை. அதன் பின்னரும் பயிற்சியாளர், அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதனால் கீழே விழுந்த போது அந்த மாணவியின் தலையில் அடிபட்டதால் அவர் இறந்து உள்ளார். 

    இது போன்ற சம்பவம் எந்த கல்லூரியிலும் நடக்கக்கூடாது. நான் அந்த வீடியோவை பார்த்ததும், போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த பயிற்சியாளரை கைது செய்து உள்ளனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அத்துடன் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சி நடத்தும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி நடத்தக்கூடாது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்த பிறகு தான் பயிற்சியை நடத்த வேண்டும்.

    மேலும் அதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு விருப்பம் உள்ளதா? என்று கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பயிற்சி கொடுக்க வேண்டும். கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி இறந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரண தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வழங்கினார். அவருடன் கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோரும் சென்று இருந்தனர். #coimbatorestudentdeath

    ×