search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri dam"

    • தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் அணைக்கு, 374 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 921 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகமாகும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை, 8 மணி நிலவரப்படி நெடுங்கல்லில், 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதே போல், போச்சம்பள்ளி 32.10, பாரூர் 29, பாம்பாறு அணை 28, ஊத்தங்கரை 25.40, கே.ஆர்.பி. அணை 24.20, பெனுகொண்டாபுரம் 5.20 என மொத்தம் 208.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டரில் வெல்டிங் பணிகள் நிறைவடைந்தன.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக ஷட்டர் அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது.

    இதைத்தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து மதகில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடந்தன. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்றுடன் முடிந்தன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெல்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, வெல்டிங் வைக்கப்பட்ட இடத்தில் கிரைன் செய்யும் பணிகள் நடக்கிறது. ஒரிரு நாட்களில் அப்பணிகள் முடிவடையும். தொடர்ந்து ஷட்டரில் வர்ணம் பூசும் பணிகள் நடக்கும்.

    இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். தற்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் மூலம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
    கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு மற்றும் ஷட்டரில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக மதகு அமைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய மதகு அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக மதகு அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது. இதனிடையே ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    இதில் முதல்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந்தேதி நிறைவு பெற்றது.

    இதையடுத்து புதிய மதகு மற்றும் ஷட்டரில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகளில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிக வேக காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் வெல்டிங் பணிகளில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இருப்பினும் கியாஸ் வெல்டிங் பணிகள் 4 முதல் 5 நாட்களில் முழுமையாக நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டரில் இரும்பு தளவாடங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. #Krishnagiridam
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டர் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில், 12அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக ஷட்டரை அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது.

    தொடர்ந்து 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. கடந்த 23-ந் தேதி வரை 6.5 அடி உயரத்திற்கு ஷட்டர் பொருத்தப்பட்டு, கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் பணியாளர்கள் விடுமுறை காரணமாக பணிகள் சில நாட்கள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி மீண்டும் மதகு அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    நேற்று மாலை நிலவரப்படி, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தளவாடங்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தன. பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுகளை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    புதிய ஷட்டரில் 20 அடி உயரத்திற்கு இரும்பு தளவாடங்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடைபெறும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், எதிர் திசையில் கியாஸ் வெல்டிங் வைக்கும் போது, தீப்பொறிகள் தொழிலாளர்கள் மீது தெறிக்கும் என்பதால், இப்பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனை தொடர்ந்து புதிய ஷட்டரில் 3 கட்டங்களாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெறும். புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் முழுமையாக அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் தொய்வின்றி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் அணை முழு கொள்ளளவான 52 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு அமைப்பதற்காக தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1053 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக இன்று அணையில் இருந்து 2064 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்நிலையில் புதிய மதகு அமைப்பதற்காக, தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது. தற்காலிக மதகை அகற்றிய பின், புதிய நிரந்தர மதகு அமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது அணையின் தரைபாலம் மூழ்கி நீர் செல்வதால் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீர்மட்டம் தற்போது 31.10 அடியாக உள்ளது. இதே போல் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.66 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 640 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது.

    இதனால் கிருஷ்ணகிரி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.28 அடியாகும். அணையின் தற்போதைய நீர்மட்டம் 42.89 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    இதேபோல கிருஷ்ணகிரி அணையின் தற்போதைய உச்சபட்ச நீர்மட்டம் 42 அடியாகும். நேற்று அணையின் நீர்மட்டம் 38.05 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 662 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று முன்தினம் 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    நேற்று முதல் அணையில் இருந்து 1,017 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகமானால் மேலும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ×