என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1644 கனஅடியாக நீடிப்பு
    X

    கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1644 கனஅடியாக நீடிப்பு

    • கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால், பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாரூர் ஏரிக்கு நீர்வரத்து நேற்று காலை 140 கனஅடியாக சரிந்தது.

    கிருஷ்ணகிரி:

    தென்பெண்ணை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை நேற்று முன்தினம் 680 கன அடியாக வந்த நீர்வரத்து நேற்று 495 கனஅடியாக சரிந்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 41.16 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று 2வது நாளாக விநாடிக்கு 1644 கனஅடியாக நீடித்தது. கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால், பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அணையில் இருந்து மணல் போக்கி மதகுகள் வழியாக விநாடிக்கு 1644 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும், பாரூர் ஏரிக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 185 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 140 கனஅடியாக சரிந்தது. ஏரியின் முழு கொள்ளளவான 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பிய உள்ளதால், நீர்வரத்து முழுவதும் கால்வாய்கள் வழியாக இணைப்பு ஏரிகளுக்கு செல்கிறது.

    ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2400 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1726 கனஅடியாக சரிந்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.78 அடியாக இருந்ததால், அணையின் பாதுகாப்பை கருதி, நீர்வரத்து முழுவதும் 5 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    Next Story
    ×