search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kondathu kaliamman temple"

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் , கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு காப்பு கட்டு பூசாரிகள் கை குண்டம் வாரி இறங்குதல், வீரமக்கள் குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

    காைல 8மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக ஆராதனை, அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, மண்டபக்கட்டளை நடந்தது. மதியம் 2மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டப கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்தல், தேங்காய் வழங்குதல் நடந்தது. மதியம் 3-30மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 7மணிக்கு அம்மன் கலைக்குழு மற்றும் ஸ்ரீசக்தி பண்பாட்டு மையம் வழங்கும் ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் , 9-30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று 5-ந் தேதி காலை 7-30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு , மண்டப கட்டளை நடக்கிறது. நாளை 6-ந்தேதி காலை 7-30மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 7-ந் தேதி காலை 7-30மணிக்கு அம்மன் புலி வாகன திருவீதி உலா, மாலை 7 மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 8-ந் தேதி காலை 11 மணிக்கு மகா தரிசனம், அம்மன் புறப்பாடு, கொடிஇறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் புகழ் மிக்க கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் புகழ் மிக்க கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டும் தோறும் மிக சிறப்பாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல், 6 மணிக்கு தோரணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் இரவு பரிவட்டம் கட்டுதல், திருக்கல்யாண வைபோகம், பக்தர்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல், அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். பின்னர் மாலை 4 மணிக்கு தேர் திருவிழா நடைபெறுகிறது. குண்டம் விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு குண்டம் இறங்க உள்ளனர்.

    இதற்காக திருப்பூர், ஊத்துக்குளி, அவினாசி, குன்னத்தூர், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருவிழாவில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×