search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janakpur"

    நேபாளம் நாட்டில் இருநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை புதுடெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    காத்மாண்டு:

    இருநாள் அரசு முறை பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.

    இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.

    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.


    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

    இந்த விழாவின்போது அவரை கவுரவிக்கும் வகையில் காத்மாண்டு நகரின் சாவியை மேயர் பிட்யா சுந்தர் ஷாக்கியா அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யுத்தப் பாதையில் இருந்து புத்தப் பாதைக்கு திரும்பிய நேபளத்தின் சிறப்பை பாராட்டி பேசினார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் வளர்ச்சிக்கு மலையேற்றக்குழு வழிகாட்டி போல் நின்று உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சியின்போது 55 கிலோ எடையிலான புத்தர் சிலை உள்பட அவருக்கு பல்வேறு நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டன. பின்னர், அனைவரிடம் இருந்தும் விடைபெற்ற பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் முக்கியத்துவமான அண்டை நாடு நேபாளம் என கூறினார். #modiinnepal #Janakpurtemple
    காத்மாண்டு:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றார். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

    ஜனக்பூர் நகரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு நேரடி பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் அங்குள்ள சீதை ஆலயத்தில் வழிபாடு செய்தார்.



    இதையடுத்து, அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சீதை பிறந்த இடத்திற்கு வந்து வழிபாடு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் மரியாதை மற்றும் புகழினால் ஒருங்கிணைந்து உள்ளனர். நேபாளம் பல ஆண்டுகளாக ஆன்மீக சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. நேபாளம் இல்லாமல் இந்தியாவின் நம்பிக்கை முழுமையற்றது.

    இந்தியாவும், நேபாளமும் இணைந்து உள்ளதற்கு வரலாறு சான்றாக உள்ளது. எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் நேபாளம், இந்தியாவிற்கு துணையாக இருந்துள்ளது. ஜனக்பூரானது, ஜானக்கின் ராஜா மற்றும் ராஜா தசரதனை மட்டும் இணைக்க வில்லை, இந்தியாவையும், நேபாளத்தையும் இணைத்துள்ளது.



    நான் இந்தியா குறித்து மட்டும் பேசவில்லை. அண்டை நாடுகளின் வளர்ச்சி குறித்தும் பேசுகிறேன். நேபாளம் வளர்ச்சியடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இரு அண்டை நாடுகளும், பாரம்பரியம், வியாபாரம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய 5 துறைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், ஜனக்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய்  வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    என மோடி கூறினார். #modiinnepal #Janakpurtemple

    ஜனக மன்னரின் மகளும் ராமரின் மனைவியுமான சீதை பிறந்த ஜனகபுரியில் உள்ள ஆலயத்தில் இன்று வழிபாடு செய்ததன் மூலம் நெடுநாள் ஆசை நிறைவேறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modiofferprayers #JanakpurSitatemple
    காத்மாண்டு:

    மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

    ஜனகபுரி (இன்றைய பீகார் என்கிறார்கள்) மன்னன் ஜனகராஜா. இவர் மகள் சீதை. இதிகாசப்படி இவருடைய பிறப்பு மிதிலை நகரில் இருந்துள்ளது. அந்த மிதிலை நகர்தான் பீகாரின் சீதாபுரி மாவட்டமாக இன்றும் சீதை நினைவாக போற்றப்படுகிறது.

    அதேவேளையில், நேபாளம் நாட்டில் உள்ளவர்கள் அங்குள்ள ஜனகபுரியில் சீதை பிறந்ததாகவும், இங்குதான் சுயம்வரத்தின்போது ராமர் - சீதைக்கு திருமணம் நடந்ததாகவும் நம்புகின்றனர்.

    இந்நிலையில், நேபாள நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜனகபுரி நகரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு நேரடி பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.



    அங்குள்ள சீதை ஆலயத்தில் இன்று வழிபாடு செய்த மோடி, இந்த பயணத்தின்போது இங்கு வழிபாடு செய்ததன் மூலம் தனது நெடுநாள் ஆசை நிறைவேறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modiofferprayers #JanakpurSitatemple

    ×