search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imaikka Nodigal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனுராக் காஷ்யப் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

    இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.


    அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இவரே இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் ஜி.வி.பிரகாஷ் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஜி.வி.பிரகாஷ் தற்போது ரிபெல், இடிமுழக்கம், கள்வன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சைரன், எஸ்.கே.21, சூர்யா 43 போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். எனவே இந்த பட வேலைகள் முடிந்த பிறகு அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்த மானஸ்வி, தொடர்ந்து அவரை அம்மா என்றே அழைத்து வருகிறார். #Nayanthara #Manasvi
    இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி.

    நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசும் வசனம் பிரபலமானது. மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள். இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார்.

    கும்கி 2, பரமபதம் விளையாட்டு, இருட்டு, கண்மணி பாப்பா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20 படங்கள் மானஸ்வி கைகளில் இருக்கிறது. மகள் பற்றி கொட்டாச்சி கூறும்போது ‘அவள் சினிமா காட்சிகளை காப்பி செய்து நடித்த சில காட்சிகளை வீடியோவாக எடுத்து முகநூலில் பகிர்ந்தேன்.



    அதை பார்த்துவிட்டு தான் இமைக்கா நொடிகள் வாய்ப்பு வந்தது. நான் சின்னதாக காமெடியன் வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் என் மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி. நயன்தாரா அடிக்கடி மானஸ்வியுடன் பேசுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்றார்.
    தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடியால், தனது சம்பள பணம் ரூ.50 லட்சத்தை நயன்தாரா படத்திற்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். #Nayanthara
    நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. 

    இமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல் எழுந்தது. ரிலீஸ் செய்வதற்கு நெருக்கடியான நிலைக்கு ஆளானார். அப்போது நயன்தாராவுக்கு 50 லட்சம் சம்பள பாக்கி இருந்து இருக்கிறது. 



    நயன்தாரா நினைத்திருந்தால் அதை அப்போது கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளரின் நிலையை எண்ணி அந்த சம்பளத்தை கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம். இந்த செய்தி தமிழ் சினிமாவில் பரவ நயன்தாராவுக்கு பாராட்டு மழை குவிகிறது.
    நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் விமர்சனம். #ImaikkaNodigal #ImaikkaNodigalReview
    பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.

    மேலும் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்கு போனில் மிரட்டல் விடுகிறார். இதனையடுத்து தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. ஆனால், நயன்தாரா அனுராக்கை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். 

    இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் மாடலிங் பெண்ணான ராஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் சொல்லிக் கொள்ளாத நிலையில், சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள்.

    இவர்கள் இருவரும் பெங்களூருவில் சந்திக்கிறார்கள். அப்போது ராஷி கன்னாவை அனுராக் கடத்துகிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். தம்பி சிபிஐயிடம் மாட்டிக் கொண்டதால் நயன்தாராவிற்கு வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது.



    இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி பிடித்தார்? சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா? ராஷி கன்னா என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சிபிஐ அதிகாரியாக படத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் நயன்தாரா. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, அதற்கு ஏற்றார் போல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அனுராக்கை எப்படியாவது பிடித்தாக வேண்டும். தம்பியை காப்பாற்ற வேண்டும் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப். தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வா, இளமை துள்ளலுடன் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதாபாத்திரம் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. அதுபோல் நயன்தாராவிற்கு குழந்தையாக நடித்திருப்பவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    கிரைம் திரில்லர் கதையை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முந்தைய படமான டிமான்ட்டி காலனி சிறந்த வரவேற்பை பெற்றதுபோல், இப்படத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் இயக்கி இருக்கிறார். சில லாஜிக் மீறல்கள் சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறார். திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக விஜய்சேதுபதி, நயன்தாரா பாடல் முணுமுணுக்க வைத்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘இமைக்கா நொடிகள்’ மிதமான வேகம்.

    இமைக்கா நொடிகள் வீடியோ விமர்சனம் பார்க்க: 


    இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் அனுராக் காஷ்யப் தமிழில் ஜல்லிக்கட்டு படத்தை தயாரித்து வருகிறார். #Jallikattu
    இந்தியில் முக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப். திரைக்கதையில் ஜாம்பவான் எனப்படும் அனுராக் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி வருகிறார்.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடியது எவ்வாறு என்பது இந்த படம் மூலம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் இயக்குனர் சந்தோஷ். உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கென்யா நாட்டில் உள்ள மசாய்மாரா பகுதியிலும் படம் பிடித்த முதல் தமிழ் படம் இதுதான்.



    மசாய்மாரா பகுதியில் உள்ள காளைகள் நமது பகுதி காளைகள் இனத்தை சேர்ந்தவை என்பதால் அங்கே சென்று படமாக்கி இருக்கிறார்கள். அகிம்சா புரடக்‌‌ஷன் சார்பில் அனுராக் காஷ்யப் மற்றும் நிருபமா இணை தயாரிப்பில் உருவாகி இருக்கிறது இந்த ஜல்லிக்கட்டு படம். #Jallikattu
    பிரபல தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, தற்போது தமிழில் நான்கு படங்களில் நடித்து வந்தாலும், அதுபோன்ற வேடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். #RashiKhanna
    தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா தமிழுக்கு வருகிறார். வந்த வேகத்திலேயே விஷாலுடன் அயோக்யா (டெம்பர் பட ரீமேக்), சித்தார்த்துடன் சைத்தான் கே பச்சா, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, அதர்வாவுடன் இமைக்கா நொடிகள் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி:-

    நயன்தாராவுடன் நடித்த அனுபவம்?

    அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால் அவரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்கிறேன்.

    எப்படி படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

    இப்போதைய காலகட்டத்தில் நிறைய நல்ல நல்ல கதைகள் வருகின்றன. கதையையும் அதில் எனது பங்களிப்பையும் தான் முதலில் பார்ப்பேன். ஒரு சாதாரண கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை. முழு பவுண்டட் ஸ்க்ரிப்டையும் முதலில் படிப்பேன். அதன் பின்னர் ஒவ்வொரு காட்சியிலும் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே படத்தை தேர்ந்தெடுக்கிறேன்.

    தமிழுக்கு வர ஏன் தாமதம்?

    நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் நான் எனது சினிமா வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் செய்யவில்லை. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் தமிழில் வாய்ப்புகள் வருகின்றன. படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கடந்த ஆண்டு ஒரு மலையாள படத்தில் கூட நடித்தேன். கதைதான் முக்கியம்.



    இமைக்கா நொடிகளில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

    எனது கதாபாத்திர வடிவமைப்பு தான் காரணம். மலையாளத்தில் வில்லன் படத்திலும் எனக்கு சின்ன வேடம் தான். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது.

    தமிழில் குரல் கொடுப்பீர்களா?

    இமைக்கா நொடிகள் படப்பிடிப்புக்கு முன்பே ஒரு டீச்சர் வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன். டப்பிங் பேச தயாராக இருக்கிறேன்.

    உங்கள் கனவு வேடம்?

    சவாலான வேடங்கள் அத்தனையிலும் நடிக்க ஆசை. நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதுபோன்ற ஒரு வேடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
    ×