search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adangamaru"

    ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் கார்த்திக் தங்கவேலின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Adangamaru
    ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் வி.சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருப்பது, படத்தை கொண்டாட மேலும் ஒரு வலுவான காரணமாக அமைந்துள்ளது.

    சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் 'அடங்க மறு' படமும் அந்த வகையிலான ஒரு படம் தான். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 

    இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 



    சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
    பிரபல தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, தற்போது தமிழில் நான்கு படங்களில் நடித்து வந்தாலும், அதுபோன்ற வேடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். #RashiKhanna
    தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா தமிழுக்கு வருகிறார். வந்த வேகத்திலேயே விஷாலுடன் அயோக்யா (டெம்பர் பட ரீமேக்), சித்தார்த்துடன் சைத்தான் கே பச்சா, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, அதர்வாவுடன் இமைக்கா நொடிகள் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி:-

    நயன்தாராவுடன் நடித்த அனுபவம்?

    அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால் அவரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்கிறேன்.

    எப்படி படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

    இப்போதைய காலகட்டத்தில் நிறைய நல்ல நல்ல கதைகள் வருகின்றன. கதையையும் அதில் எனது பங்களிப்பையும் தான் முதலில் பார்ப்பேன். ஒரு சாதாரண கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை. முழு பவுண்டட் ஸ்க்ரிப்டையும் முதலில் படிப்பேன். அதன் பின்னர் ஒவ்வொரு காட்சியிலும் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே படத்தை தேர்ந்தெடுக்கிறேன்.

    தமிழுக்கு வர ஏன் தாமதம்?

    நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் நான் எனது சினிமா வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் செய்யவில்லை. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் தமிழில் வாய்ப்புகள் வருகின்றன. படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கடந்த ஆண்டு ஒரு மலையாள படத்தில் கூட நடித்தேன். கதைதான் முக்கியம்.



    இமைக்கா நொடிகளில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

    எனது கதாபாத்திர வடிவமைப்பு தான் காரணம். மலையாளத்தில் வில்லன் படத்திலும் எனக்கு சின்ன வேடம் தான். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது.

    தமிழில் குரல் கொடுப்பீர்களா?

    இமைக்கா நொடிகள் படப்பிடிப்புக்கு முன்பே ஒரு டீச்சர் வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன். டப்பிங் பேச தயாராக இருக்கிறேன்.

    உங்கள் கனவு வேடம்?

    சவாலான வேடங்கள் அத்தனையிலும் நடிக்க ஆசை. நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதுபோன்ற ஒரு வேடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
    ×