search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High court order"

    • தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
    • கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனக ராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடை பெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.

    கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பற்றி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தொடர்வதற்கான அனுமதியை கோரிய மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தொடர்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

    என்ஜினீயருக்கு சம்பளம் வழங்காததால் ‘எம்.வி.சீ.ஜெல் ஒன்’ கப்பலை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #Ship

    சென்னை:

    தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் மதிவாணன். கப்பல் என்ஜினீயர்.

    இவர் நவி மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனம் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ‘எம்.வி.சீ. ஜெல் ஒன்’ கப்பலில் தலைமை என்ஜினீயராக நியமனம் செய்யப்பட்டார்.

    6 மாத காலத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டது. அதையடுத்து அவர் 2017 அக்டோபர் மாதம் 24-ந்தேதி வேலையில் சேர்ந்தார்.

    அவருக்கு மாதம் 2500 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மதிவாணன் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி வரை அந்த கப்பலில் தலைமை என்ஜினீயராக பணியாற்றினார்.

    இந்த நிலையில் தனக்கு 3 மாதம் சம்பளம் தரவில்லை. அந்த தொகையை தரவேண்டும் என்று கோரி மதிவாணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ‘எம்.வி.சீ.ஜெல் ஒன்’ என்ற வணிக கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்ததற்கு 3 மாதம் 8 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கினார்கள். மீதமுள்ள 3 மாதத்துக்கு சம்பளம் தரவில்லை.

    எனவே தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ‘எம்.வி.சீ.ஜெல் ஒன்’கப்பலை சிறைபிடிக்க துறைமுக நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், “என்ஜினீயருக்கு சம்பளம் பாக்கி தராததால் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலை சிறை பிடிக்க துறைமுக தலைவருக்கு உத்தரவிடுகிறேன்.

    மேலும் கப்பல் உரிமையாளர்கள் ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் 14 ஆயிரத்து 833 அமெரிக்க டாலர்களை டெபாசிட் செய்ய வேண்டும். அன்றைய நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த வேண்டும். அதன்பின் கப்பல் விடுவிக்கப்படும் என்று கூறினார். #HighCourt #Ship

    புதிய தலைமை செயலகம் முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அந்த கட்டிடத்தில் அரசு பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது.

    மேலும், அந்த கட்டிடம் கட்டியதல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நலர் கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கமி‌ஷன் விசாரணை கண் துடைப்பு நாடகம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு வழக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து இதுவரை ஊழல் தடுப்பு போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. என்றார்.

     


    மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கை போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் தீர விசாரிக்க வில்லை. ஆவணங்களை பார்க்க வில்லை. அவர் எத்திரத்தனமாக செயல் பட்டுள்ளார். இப்போது இந்த வழக்கை பற்றி பொதுக்கூட்டத்தில் முதல்அமைச்சர் பேசுகிறார். இதனால் சில அச்சம் ஏற்படுகிறது எனவே வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு தடை வேண்டும் என்றார்.

    தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் எதுவும் நடந்து விடாது. மேலும் ரெகுபதி ஆணையத்தில் இருந்து ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஆவணங்கள் எப்போது சென்றது என்ற விவரத்தை அட்வகேட் ஜெனரல் அரசிடம் கேட்டு தெரிவிக்கவேண்டும்‘ என்று உத்தரவிட்டார். #ADMK #DMK #MKStalin

    ஆட்டோ டிரைவர் காதல் வலையில் சிக்கி கர்ப்பமடைந்த சிறுமியின் கருவை கலைப்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யும்படி கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHighCourt
    சென்னை:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகள் 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். பிளஸ் 2 படித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது, அவர் தினமும் ஆட்டோவில் சென்று வந்தார். அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் சந்தோஷ்குமார், ஏற்கனவே திருமணமானவர். ஆனால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, என் மகளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதை நம்பி, அவருடன் கடந்த மே மாதம் என் மகள் சென்று விட்டார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். போலீசார் என் மகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போது, அவர் கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டார். என்னுடைய மகள் தற்போது காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

    என் மகளுக்கு இன்று 17 வயது கூட ஆகவில்லை. அதனால், மைனர் பெண்ணான என் மகளது வயிற்றில் உள்ள கருவை கலைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். என் மகளை, இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க திருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைப்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். இதற்காக, அந்த சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் முன்பு போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்.

    இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். கோவை அரசு ஆஸ்பத்திரி டீன், பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.  #MadrasHighCourt

    மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக முகமது நசீமுதீன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜன் என்பவர் கோ வாரண்டோ வழக்கை தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து நிபுணத்துவம், அனுபவம் இல்லாத நபரை வாரிய தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. வனம் மற்றும் சுற்று சூழல் துறை முதன்மை செயலாளராக உள்ள நசீமுதீன் தற்போது கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது’ என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மாசுகட்டுப்பாட்டு வாரியம் தலைவர் பதவி நியமனத்திற்கான விதிகள் உருவாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அரசு வக்கீல் அந்த விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு 2 மாதம் காலஅவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TNPSCExam
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

    இதன் அடிப்படையில், அந்த தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்த மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முதலில் விசாரித்தார். அப்போது குரூப்-1 தேர்வில் 72 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களது தேர்ச்சி என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டார்.



    மேலும், இந்த வழக்கு பொதுநல வழக்கின் தன்மை உள்ளதால், டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரைத்தார். மேலும், இந்த தேர்வு முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் சிலரை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ், ‘இந்த முறைகேடு தொடர்பாக மொத்தம் 266 விடைத்தாள்கள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையின் 3 பிரிவினர் இதுதொடர்பாக ஆய்வு செய்து, ஒரு பிரிவினர் மட்டும் அறிக்கை கொடுத்துள்ளனர். மீதமுள்ள 2 பிரிவினர் அறிக்கை தந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு புலன் விசாரணையை மேற்கொள்ள முடியும். எனவே, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் காலஅவகாம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘இந்த வழக்கை போலீசார் வேண்டும் என்றே இழுத்து அடித்து வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி.யில், 67 விடைத்தாள்களை காணவில்லை என்றனர். தற்போது 2 தடய அறிவியல் துறையினர் அறிக்கை தரவில்லை என்கின்றனர். இந்த முறைகேடு வழக்கில் ஏற்கனவே 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முறைகேட்டில் பெரிய அளவில் பணம் விளையாடியுள்ளது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் இதுவரை யார் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செயல் மிகப்பெரிய அதிர்ச்சிஅளிக்கிறது’ என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேர்வு முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு காலஅவகாசம் வழங்கினர். போலீசார் 2 மாதங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.  #TNPSC 
    1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #Tasmac #SupremeCourt #ChennaiHighCourt
    புதுடெல்லி:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    அதன் பின்னர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு, அடைக்கப்பட்ட மதுக்கடைகளில் பல மீண்டும் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இதை விசாரித்த ஐகோர்ட்டு ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது. வகைமாற்றம் செய்யாமல் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதித்த நீதிபதிகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதனால் 1,300 மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திடீரென்று மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்த தமிழக அரசு, மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

    அவர்கள் தங்கள் வாதத்தில், ‘டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. சண்டிகர் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு தமிழக அரசு தாக்கல் செய்த விளக்கம் கோரும் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் நகராட்சி பகுதிகளில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

    ஆனால் மனுதாரர் கே.பாலு மற்றும் அவரது சார்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செயன் தங்கள் வாதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் நகராட்சி பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு முழு விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, இரவோடு இரவாக 1,300 மதுக்கடைகளை நகராட்சி பகுதிகளில் திறந்துள்ளது’ என்று குற்றம் சாட்டினர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தங்கள் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக்கூறியதுடன், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், ‘நகராட்சி பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறப்பது குறித்து கடைவாரியாகத்தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். ஒரே உத்தரவில் இத்தனை கடைகள் திறந்துள்ளதை அனுமதிக்க முடியாது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்து அதை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    ×