என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தலைமை செயலக முறைகேடு வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அந்த கட்டிடத்தில் அரசு பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது.
மேலும், அந்த கட்டிடம் கட்டியதல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நலர் கமிஷன் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கமிஷன் விசாரணை கண் துடைப்பு நாடகம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு வழக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து இதுவரை ஊழல் தடுப்பு போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. என்றார்.
மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கை போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் தீர விசாரிக்க வில்லை. ஆவணங்களை பார்க்க வில்லை. அவர் எத்திரத்தனமாக செயல் பட்டுள்ளார். இப்போது இந்த வழக்கை பற்றி பொதுக்கூட்டத்தில் முதல்அமைச்சர் பேசுகிறார். இதனால் சில அச்சம் ஏற்படுகிறது எனவே வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு தடை வேண்டும் என்றார்.
தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் எதுவும் நடந்து விடாது. மேலும் ரெகுபதி ஆணையத்தில் இருந்து ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஆவணங்கள் எப்போது சென்றது என்ற விவரத்தை அட்வகேட் ஜெனரல் அரசிடம் கேட்டு தெரிவிக்கவேண்டும்‘ என்று உத்தரவிட்டார். #ADMK #DMK #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்