search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat HC"

    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்
    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்

    குஜராத் மாநில கேடா (Kheda) மாவட்டத்தில் மடர் தாலுக்காவில் உள்ளது உந்தேலா கிராமம்.

    உந்தேலாவில் கடந்த 2022 அக்டோபர் அன்று குஜராத்தின் பிரபலமான நவராத்திரி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொருட்கள் சேதம், கல்லெறிதல் உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது.

    உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர்.

    மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் 6 பேரை தேடி கைது செய்தனர். அவர்களை மீண்டும் மோதல் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்து அங்குள்ளவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு மின்சார கம்பத்தில் கட்டி வைத்து ஒரு கம்பால் அடித்தனர்.

    காவலர்கள் அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    பாதிக்கப்பட்ட அந்த 6 பேரும் தங்களை அடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் அளிக்க முன் வந்த இழப்பீட்டையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

    இச்செயலுக்காக காவல்துறையினர் பாதிப்புக்குள்ளான 6 பேரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஃபேயா மற்றும் கீதா கோபி தமது தீர்ப்பை அறிவித்தனர்.

    அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    நடந்தது ஒரு மனிதாபிமானமற்ற செயல். காவல் ஆய்வாளர் பர்மர், துணை ஆய்வாளர் குமாவத், தலைமை கான்ஸ்டபிள் லக்ஷ்மண்சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராஜுபாய் தாபி ஆகியோர் குற்றவாளிகளே. அந்த 4 காவல்துறையினரும் 14 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த தவறினால் மேலும் 3 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    தீர்ப்பை அளித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது.

    காவல்துறையினரின் அத்துமீறலுக்கு இந்த தண்டனை போதுமானதல்ல என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    மாநிலங்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக அகமது படேல் தாக்கல் செய்த மனு மீது மறுபரிசீலனை செய்யும்படி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும்படி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. #RajyaSabhaElection #AhmedPatel
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் பல்வந்த்சிங் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடினார்.

    காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அவர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனால் அகமது படேல் வெற்றி பெற்றதாகவும், அந்த வாக்குகளை கணக்கில் சேர்த்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் ராஜ்புத் தனது மனுவில் கூறியிருந்தார். எம்எல்ஏக்களுக்கு அகமது படேல் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.


    அதன்பின்னர் ராஜ்புத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அகமது படேலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அகமது படேல் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

    இந்நிலையில் அகமது படேல் வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, அகமது படேல் மனு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு கூறினர். எனவே, அகமது படேல் மனு மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RajyaSabhaElection #SupremeCourt #AhmedPatel #GujaratHighCourt
    நரோடா பாட்டியா வன்முறை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #NarodaCase #NarodaPatiya
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு மறுநாள், அதாவது 2002ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத்தின் நரோடா பாட்டியா என்ற இடத்தில் கடும் வன்முறை வெடித்தது. இதில், சிறுபான்மை இனத்தவர்கள் 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பஜ்ரங் தளம் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 18 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள ராஜ்புத், ராஜ்குமார் சாமால், உமேஷ் பர்வாத் ஆகியோர் சார்பிலும் தண்டனை தொடர்பாக மீண்டும் வாதம் நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களது தரப்பு வாதங்களை முறையாக கேட்கவில்லை என்பதால்,  தண்டனை தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று மூவரும் மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று  நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக அறிவித்தனர். மேலும், இந்த மூன்று பேரும் 6 வாரங்களுக்குள் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இன்று தண்டனை பெற்றுள்ள 3 பேரும், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். அதன்பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் என நிரூபணமானது குறிப்பிடத்தக்கது. #NarodaCase #NarodaPatiya

    ×