search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கம்பால் அடித்த காவலர்கள்: 14 நாள் சிறை, ரூ.2000 அபராதம்
    X

    கம்பால் அடித்த காவலர்கள்: 14 நாள் சிறை, ரூ.2000 அபராதம்

    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்
    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்

    குஜராத் மாநில கேடா (Kheda) மாவட்டத்தில் மடர் தாலுக்காவில் உள்ளது உந்தேலா கிராமம்.

    உந்தேலாவில் கடந்த 2022 அக்டோபர் அன்று குஜராத்தின் பிரபலமான நவராத்திரி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொருட்கள் சேதம், கல்லெறிதல் உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது.

    உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர்.

    மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் 6 பேரை தேடி கைது செய்தனர். அவர்களை மீண்டும் மோதல் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்து அங்குள்ளவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு மின்சார கம்பத்தில் கட்டி வைத்து ஒரு கம்பால் அடித்தனர்.

    காவலர்கள் அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    பாதிக்கப்பட்ட அந்த 6 பேரும் தங்களை அடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் அளிக்க முன் வந்த இழப்பீட்டையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

    இச்செயலுக்காக காவல்துறையினர் பாதிப்புக்குள்ளான 6 பேரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஃபேயா மற்றும் கீதா கோபி தமது தீர்ப்பை அறிவித்தனர்.

    அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    நடந்தது ஒரு மனிதாபிமானமற்ற செயல். காவல் ஆய்வாளர் பர்மர், துணை ஆய்வாளர் குமாவத், தலைமை கான்ஸ்டபிள் லக்ஷ்மண்சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராஜுபாய் தாபி ஆகியோர் குற்றவாளிகளே. அந்த 4 காவல்துறையினரும் 14 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த தவறினால் மேலும் 3 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    தீர்ப்பை அளித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது.

    காவல்துறையினரின் அத்துமீறலுக்கு இந்த தண்டனை போதுமானதல்ல என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×