search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang conflict"

    கபிஸ்தலம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கோஷ்டி மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 57) விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் சண்முகன் மகன் சுரேஷ் (32) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் ஆடு மேய்த்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பழனிசாமியை சுரேஷ் தரப்பினர் திட்டியதாக கூறி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஆயுதங்களுடன் மோதினர். இதில் சண்முகம், சுரேஷ், மேகநாதன், லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகிய 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ,ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி கொடுத்த புகாரின் சண்முகம், சுரேஷ், மேகநாதன், ஆகியோர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    தமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதலில் வட்டார பொது செயலாளர் காயம் அடைந்தார்.

    பல்லடம்:

    காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்குடன் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எழுந்து வடக்கு மாவட்ட தலைவர் கோபி தன்னிச்சையாக செயல்படுகிறார் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத்திடமும் புகார் தெரிவித்தனர். அவர்கள் பல்லடம் பகுதியில் உள்ள பழைய நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் கோபி நியமித்து உள்ளார்.


    நீண்ட காலமாக கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து உள்ளார். புதிதாக பதவி பெற்றவர்கள் பழைய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றனர்.

    அவர்களிடம் சஞ்சய் தத் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    கூட்டம் முடிந்ததும் சஞ்சய் தத் புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்பி விட்டு வந்த மாவட்ட தலைவர் கோபியிடம் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.அப்போது நிர்வாகிகள் சிலர் நாற்காலிகளை தூக்கி கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கினர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த மோதலில் சென்னிமலை வட்டார காங்கிரஸ் பொது செயலாளர் பழனிசாமி காயம் அடைந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த மோதல் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இது குறித்து மாவட்ட தலைவர் கோபி கூறும் போது, கட்சி பொறுப்புகளுக்காக மாவட்டம் பிரிக்கப்பட்டதில் சிலருக்கு குறைபாடுகள் இருந்தால் என்னிடம் தெரிவித்து இருக்கலாம். மாநில தலைமையிடம் அதை தெரிவித்து அவர்களது தேவையை பூர்த்தி செய்திருப்பேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் த.மா.கா. சென்று வந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

    நன்கு செயல்படுபவர்களை தான் மேலிடத்தில் பரிந்துரை செய்ய முடியும் என்றார்.

    வடமதுரை அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்ததை தட்டிக் கேட்டதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள சிட்டம்பட்டியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இநத கோவிலில் மருதை என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலில் விழா நடத்துவதற்காக அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை சிலர் செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு தரப்பினர் அங்கு வந்து எங்கள் இடத்தில் கோவில் கட்டிக் கொண்டு இங்கு சாமி கும்பிடுகிறீர்களா? என அவர்களிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர்.

    மேலும் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள், மற்றும் மேடையை அடித்து சூறையாடினர்.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோவிலையும் அங்கிருந்தவர்களையும் அடித்து தாக்கிய மாரியப்பன், தனம், கீதா, ராஜேஸ்வரி, பாலமுருகன், ராஜேந்திரன், சிவா, மணிமாறன், சித்ரா, முருகேசன் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே இடப்பிரச்சினையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி கருப்பாயி (வயது 40). இவர் தனது தாய் செல்லம்மாள் எழுதிக் கொடுத்த பூர்வீக சொத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த இடப்பிரச்சினையில் சின்னத்தம்பிக்கும் அவரது உறவினர் குமரன் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று மாலை தனது மகள் மாரியம்மாள் (18) என்பவர் திருமண வி‌ஷயம் தொடர்பாக பேசுவதற்காக சின்னத்தம்பி குடும்பத்தினர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குமரனின் மகன்கள் முருகன், சக்திவேல், பரமசிவம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. குமரன் தரப்பினர் கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் கருப்பாயி (40), குமரவேல் (55), மாரியம்மாள் (18), காளியம்மாள் ஆகியோர் படுகாயமடைநதனர்.

    அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் சின்னத்தம்பி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பர பரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளை சூறையாடியது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×