search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesh idols"

    • கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • விநாயகர் சிலையை நேற்று இரவு சிலர் கால்வாயில் கரைக்க சென்றனர்.

    சண்டிகர்:

    நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று இரவு விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் 4 இளைஞர்களை மீட்டனர். ஆனால், நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

    கோவை

    விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களி மண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டா் ஆப் பாரிஸ், தொ்மாகோல் போன்ற கலவையில் தயாரிக்கப்பட்ட சிலைகளை தவிர சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

    சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுா்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு என சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முற்படும்போது, ஒரே நாளில் 18 பேர் நீரில் மூழ்கி பலியான அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. #VinayagarChathurthi #GaneshChathurthi #GaneshIdols
    மும்பை:

    இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு செய்யப்பட்ட பல்வேறு விதமான சிலைகள் கடல், ஏரி, ஆறுகள் என நீர்நிலைகளில் கரைப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சிலைகளை நீர்நிலைகளை கரைக்கும்போது பக்தர்களும் சிலைகளுடன் நீரில் இறங்குவதால் சில நேரங்களில் அவர்களும் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சில கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் விழாவில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராய்காட், ஜல்னா, புனே உள்ளிட்ட 9 பகுதிகளில் இருந்து 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



    அதேபோல், மும்பை நகரில் இருந்து விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்காக சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆனால், விரைந்து செயல்பட்ட மீட்புக்குழுவினர் உடனடியாக 5 பேரை மீட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதுமாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு கடவுளின் விழாகளை கொண்டாடுமாறு பக்தர்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. #VinayagarChathurthi #GaneshChathurthi #GaneshIdols
    விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு தொடர்பான நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GaneshChaturthi #GaneshIdols #HC
    சென்னை:

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், பூஜைகள் முடிந்த பிறகு சிலைகளை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறைப்படி, விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் அளித்தது. சிலைகள் வைக்கும் இடத்துக்கான மின் இணைப்பை வீடுகள், கடைகளில் பெற ஆட்சேபமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்க கூடாது என்றும் அவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். பின்னர் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நிபந்தனைகள் வகுக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

    விதிகளை எதிர்த்து மற்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நாளை நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GaneshChaturthi #GaneshIdols #HC
    ×