என் மலர்
நீங்கள் தேடியது "ER Eswaran"
- திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் முழங்கினார்.
- தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.
இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி... தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே" என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.
இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே முயற்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.-
தி.மு.க.வின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இயக்கத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் திறமை படைத்த நீங்கள் (ஸ்டாலின்) சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். ஒவ்வொரு பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே அந்தப் பணியை செய்து கொண்டிருக்கின்ற பெருமை புதிய தி.மு.க தலைவருக்கு உண்டு.
துணை முதல்வராக ஆவதற்கு மூன்று ஆண்டுகள் முன்னால் இருந்தே அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருந்தவர். செயல் தலைவராவதற்கு 10 ஆண்டுகள் முன்னால் இருந்தே அந்தப் பணியை செய்து கொண்டிருந்தவர்.
கடந்த 5 ஆண்டுகளாகவே தி.மு.கவை வழி நடத்துகின்ற பொறுப்பை ஏற்று தலைவருக்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தவர்தான் ஸ்டாலின். இப்படித்தான் அவருக்கு பதவிகள் வந்திருக்கின்றன. மிக மிக பொறுமையாக இருந்துதான் இப்போது தலைவராகியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் ஒரு மாநில முதல்வர் எப்படி இயங்க வேண்டுமோ அப்படித்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அடுத்து அலங்கரிப்பார் மு.க.ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருக்கின்ற மூத்த தலைவர் மரியாதைக்குரிய துரைமுருகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறி உள்ளார்.






