search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrician died"

    • எலக்ட்ரீசியன் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன் (வயது23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் பாலாஜி சுப்பிரமணி யம்(வயது 45).

    சம்பவத்தன்று இவர் முனிசிபல் ஆபீஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குயிருப்பில் வசிக்கும் நண்பர் தங்கராஜ் என்பவரை பார்ப்பதற்காக சென்றார்.

    3-வது மாடிக்கு சென்று நண்பரை பார்த்து விட்டு கீழே இறங்க முயன்றார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு ஜன்னல் வழியாக 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிசிக்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணிகண்டன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோபி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் அந்த மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்தவர்களை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • சிகிச்சையில் இருந்த எலக்ட்ரீசியன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூரைச் சேர்ந்தவர் அம்மாபட்டி (வயது 35). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பரான அழகாபுரியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சண்முகா நதி பகுதிக்கு வந்தார்.

    அப்போது நவீன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    சிகிச்சையில் இருந்த அம்மாபட்டி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா மற்றும் நவீன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×