நிலக்கோட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

எலக்ட்ரீசியன் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன் (வயது23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com