search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly woman dies"

    • சின்னம்மா வீட்டில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
    • போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    கோத்தகிரி,

    ஊட்டி அருகே தீட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னம்மா (70). இவா் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை புகை வெளியேறியுள்ளது.

    இதைத் தொடா்ந்து , அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு உடல் கருகிய நிலையில் சின்னம்மா உயிரிழந்து கிடந்துள்ளாா். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

    சம்பவ இடத்துக்கு வந்த உதகை காவல் துறையினா் சின்னம்மாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    விசாரணையில், மின்சாரம் பாய்ந்து சின்னம்மா உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    பரமக்குடியில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
    பரமக்குடி:

    கஜா புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்தது.

    பரமக்குடி எமனேசுவரம் ஈஸ்வரன் கோவில் 5-வது தெருவை சேர்ந்தவர் இந்துமதி (வயது 83). இவர் தனது சகோதரி சாந்தா மணியுடன் (63) வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக சகோதரிகள் இருவரும் அரசு வழங்கும் உதவி தொகை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

    மழை காரணமாக இவர்களது வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த இருவரும் உடல் நசுங்கினர். மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை கடும் சிரமத்துக்கிடையே மீட்டனர்.

    படுகாயம் அடைந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சாந்தா மணியை மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    சென்னை தியாகராயநகரில் பால்கனி இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னை:

    தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜாம்மாள் (65).

    2-வது மாடியில் உள்ள சொந்த வீட்டில் இவர் 20 ஆண்டுகளாக குடியிருந்தார். இவருடைய கணவர் ராஜகோபால் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டின் பால்கனியில் சரோஜாம்மாள் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் என்று அந்த பால்கனி இடிந்து விழுந்தது.

    இதனால் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சரோஜாம்மாள் படுகாயம் அடைந்தார். அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 கால்களும் உடைந்தன.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இடிபாடுகளில் இருந்து சரோஜாம்மாளை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜாம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார். பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பால்கனி இடிந்து உயிர் இழந்த சரோஜாம்மாளுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் அங்கு வந்தனர். எதிர் பாராமல் நடந்த இந்த சம்பவம் அவர்களை சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.
    சேலம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது ஆம்னி வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொண்டலாம்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் மனைவி அங்காயி (வயது 60). இவர் நேற்று கொண்டலாம்பட்டியை அடுத்த அரியானூர் ஜங்சன் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு அந்த வழியாக வந்த ஆம்னி வேன் அவர் மீது மோதியது.

    இதில் அங்காயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ரவிகுமார், அங்காயி உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த அங்காயி மகள் செல்வி (43) சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×