search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District administration"

    • 40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன் விற்பனை அங்காடி அலங்கார மீன் வளர்ப்பு நிலையங்கள் அமைக்கலாம். இந்த திட்டத்தில் 1 அலகுகள் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 60 சதவீத மானியத்துடன் மீன் அங்காடிகள் அமைக்கலாம்.

    மேலும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்வதற்கு ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பீட்டுடன் அமைக்க லாம். இதில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இந்தத் திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப் பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 5/3 யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும், 9384824553, 9384824273 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு

    கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அணை, குளங்களில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
    • கால இடைவெளியில் போதியளவு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.

    திருப்பூர் :

    கோடை முழுமையாக துவங்குவதற்கு முன்னரே, உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மற்ற பருவங்களை காட்டிலும் கோடை காலத்தில் நீரின் தேவை அதிகரிக்கும்.அதேநேரம் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தும், அணை, குளங்களில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போதியளவு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.அவ்வகையில் கோடை நெருங்கும் சூழலில், சவால்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் சாமிநாதன் தலைமையில் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் வினியோகப்பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் புதிய குடிநீர் திட்ட பணிகளின் நிலை, கோடை கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

    ×