search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம்-மாவட்ட நிர்வாகம்
    X

    40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம்-மாவட்ட நிர்வாகம்

    • 40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன் விற்பனை அங்காடி அலங்கார மீன் வளர்ப்பு நிலையங்கள் அமைக்கலாம். இந்த திட்டத்தில் 1 அலகுகள் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 60 சதவீத மானியத்துடன் மீன் அங்காடிகள் அமைக்கலாம்.

    மேலும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்வதற்கு ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பீட்டுடன் அமைக்க லாம். இதில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இந்தத் திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப் பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 5/3 யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும், 9384824553, 9384824273 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு

    கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×