search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dhanush 50"

    • நடிகர் தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.

    நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக தன்மை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.


    இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷின் படப்பிடிப்பு ஒன்று திருப்பதி அலிபிரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதால் அலிபிரியில் பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டனர்.

    வெளியூர் பக்தர்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுவது தெரியாததால் அலிபிரியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நடிகை துஷாரா விஜயன் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • இவர் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.


    பின்னர் மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். அடுத்ததாக 'கழுவேத்தி மூர்க்கன்', 'அநீதி' போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் துஷாரா விஜயன் தற்போது தனுஷ் இயக்கும் 50-வது படத்தையும் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.



    இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் துஷாரா விஜயன், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை துஷாரா தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்று மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "தனுஷ் மூன்றாவதாக படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அவரின் சொந்தகாரர் மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் நான் தான் இசையமைக்கவுள்ளேன். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்" என கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார். அதாவது, தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் இதனால் பல டேக்குகளை எடுக்க நேரிடலாம், இது மற்ற நடிகர்களை பாதிக்கும் என்பதால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நேற்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.



    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தனுஷ்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மரியான், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கும் 50-வது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    தனுஷ் 50 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.




    • நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவரது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.


    விஷ்ணு விஷால்- எஸ்.ஜே.சூர்யா- அபர்ணா பாலமுரளி

    இந்நிலையில், தனுஷ் படத்தில் நடிப்பதாக பரவி வந்த செய்திக்கு நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதாக பரவி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக நடிக்க விரும்பினாலும் என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக என்னால் நடிக்க இயலாது. எனது சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு ரசிகர்கள் தனுஷின் 50-வது படத்தில் நடிப்பது குறித்து பேசுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    தனுஷ் - அபர்ணா பாலமுரளி

    தனுஷ் - அபர்ணா பாலமுரளி


    இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • இப்படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    திரிஷா - தனுஷ்

    திரிஷா - தனுஷ்

    இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்த்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்குமுன்பு திரிஷா, தனுஷுடன் கொடி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    தனுஷ் 50

    தனுஷ் 50


    தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

     

    தனுஷ்

    தனுஷ்

    இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    இதற்கு முன்பு தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இவரின் 50-வது படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தனுஷ்

    இந்நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் அப்டேட்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தனுஷ்  பட போஸ்டர்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார் தனுஷ்.


    ×