search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue prevention"

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • நகர்மன்ற தலைவர் கொசு மருந்து அடித்தார்

    தேவகோட்டை

    தமிழக அரசு தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவ டிக்கையை நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையா ளர் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ராம்நகர் 11 -வது வார்டு சஞ்சீவிபுரம், செந்தில்நகர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் வீடுகளில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொசு மருந்து அடித்தார். ஆணையாளர் பார்கவி உடனிருந்தார்.

    அந்த வீடுகளில் உள்ள நபர்களை மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுநர் டாக்டர் கிருஷ்ண வேணி, நகராட்சி சுகாதா ரத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் பரிசோதனை செய்தனர். நகராட்சி பணி யாளர்கள் வீடு முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து வீட்டின் உரிமையாளருக்கு டெங்கு பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத் தினர். மேலும் நகரில் டெங்கு அறிகுறி ஏற்பட்ட நபர்கள் இருக்கும் பகுதி களில் காலை, மாலை இரு வேளைகளில் கிருமி நாசி னிகள் தெளிக்கப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பணி யாளர்கள் நகர் முழுவதும் தீவிரமாக டெங்கு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பல்லடம்:

    தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன்படி பல்லடம் வட்டாரம் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்

    இந்த முகாமில், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சுகாதாரத்துறையினருக்கு வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே போல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் வீட்டு உரிமையாளர் களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது.

    இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. திண்டுக்கல்லில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தடுப்பு பணிகளில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி 19 வார்டுக்கு உட்பட்ட தெய்வசிகாமணி புரம், ஏ.ஆர். நகர், கிழக்கு ஆரோ க்கிய மாதா விஸ்தரிப்பு, அழகு நகர் உள்ளிட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர். அப்போது கொசு புழுக்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் அபேட் மருந்து ஊற்றியும், பயன்படாத சிமெண்ட் தொட்டிகளை உடைத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இது குறித்து மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் கூறுகையில், கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மீண்டும் கொசு புழுக்கள் கண்டறியப்ப ட்டால் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவி விடாமல் இருக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலங் களிலும் வார்டு வாரியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக கடந்த சில நாட்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்க்கின்றனர். அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீரை அகற்ற வலியுறுத்திகின்றனர். மேலும் அந்த இடத்தில் மஞ்சள், உப்பு போட்ட சொல்லி வருகின்றனர்.

    இதுபோல் வீட்டு அருகே தண்ணீர் தேங்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    சிரட்டை, பழைய டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி கொள்ளாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையை ஏற்படுத்து பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 4 மண்டலத்திலும் வார்டு வாரியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பெரிய வாகனங்களில் ராட்ச எந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

    மிகக்குறுகிய சந்துகள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சர்க்கரை ஆலை மற்றும் ரஞ்சன்குடிகோட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சாந்தா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி எறையூர் சர்க்கரை ஆலை மற்றும் ரஞ்சன்குடிகோட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சாந்தா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அவர் சர்க்கரை ஆலை பகுதிகள், ரஞ்சன்குடி கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தண்ணீர் பிடிக்கும் இடங்கள், கோட்டையில் உள்ள சிறு குளம் உள்ளிட்டவைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா?, மேலும் மழைக்காலங்களில் இப்பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் ஸ்ரீதர், துணை இயக்குனர் டாக்டர் சம்பத், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், மணிவாசகம், தாசில்தார் பொன்னுதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    ×