என் மலர்

    நீங்கள் தேடியது "court complex"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவுபடி அருப்புக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் இணைந்து நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள இ.எஸ்.ஐ. அல்லது பி.எப்.திட்டத்தில் உறுப்பினர் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள், சமையல் பணியாளர்கள், நெசவாளர்கள், சாலையோர வியாபாரிகள், சலவைத்தொழிலாளர்கள், முடி திருத்தபவர்கள் பங்கேற்கலாம்.

    அதேபோல் தையல் தொழிலாளர்கள், பனைமர தொழிலாளர்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், வாகனம் பழுது நீக்கும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் இதர அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பங்கேற்று பதிவு செய்து பயன் பெறலாம்.

    அந்த முகாமில் பதிவதற்கு ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். #JammuKashmir #Militants #Attack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இரவில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

    இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், மூன்று போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஜங்லாட்மண்டி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த  சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #Militants #Attack
    ×