search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congrats"

    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் திரண்டு வந்தனர்
    • பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கோவைக்கு புறப்பட்டு வந்தனர்.

    அங்கு அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    இதில் முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ஜுணன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்டசெயலாளர் அக்கீம்பாபு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் மாதன், குந்தா கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எஸ்.வசந்தராஜன், இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாடு ஊராட்சி புதுகாலணியில் கடந்த 50 ஆண்டுகளாக சாலைவசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தேனாடு ஊராட்சி புது காலனி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார், அந்த பகுதியில் உடனடியாக ரோடு போட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி தேனாடு புது காலணியில் சாலைபணிகள் தொடங்கியது. நிகழ்ச்சி யில் தேனாடு ஊராட்சிமன்ற துணைத்தலைவர் அம்ச வேணி, மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் (எல்.பி.எப்) முருகன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், நீலகிரி மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், இளைஞர்அணி சிவனேசன், புதுகாலனி வார்டு உறுப்பினர் வில்சன், கிளைச் செயலாளர் ராஜேந்திரன், தினேஷ், சக்திவேல்,விநாயகம், மணியப்பன், முருகன், கருணா, சிவகுமார், கமல், ஜோதி, நாகேந்திரன், திருச்செல்வம், அல் போன்ஸ், வினோத், விகன்ஸ், சசி, சிவா, அனந்தன், சுவிதா, லக்ஷ்மி, நேசமணி, மகாலக்ஷ்மி, சண்முகசுந்தரி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது தேனாடு புதுக்காலனியில் ரோடு வசதி அமைத்து தர ஏற்பாடு செய்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்த தற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர்.
    • பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள எம்.எம். வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் திருக்குறளில் உலக சாதனை புரிந்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் ராஜசேகர், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் குறித்தான சிறப்புகளை குறித்து சிறப்புரையாற்றினர்.

    விழாவில் 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்ததற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர். மேலும் விழாவில் நம்பிக்கை ஊட்டும் தமிழ் கவிதைகள், தமிழ் மொழியின் தொன்மை, மற்றும் மேன்மை, குறித்த வேடம் புனைந்த சிந்தனைக்குரிய உரையாடல் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் தமிழ் துறையுடன் இணைந்து அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், செய்திருந்தனர்.

    ×