என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness work camp"

    • சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடந்தது.
    • வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொதுஇடங்களில் தூய்மைபணி செய்தல், வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலையில் சோழவந்தான் பஸ் நிலையம், ரெயில்வே பீடர் ரோடு, ஒற்றைஅக்ரஹாரம், இரட்டைஅக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றினர்.

    கழிவுகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கியும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், இளநிலை பொறியாளர்கள் லீலாவதி, கருப்பையா, துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் வினோத்குமார் வரவேற்றார்.பணியாளர் சத்திய நாராயணன் நன்றி கூறினார்.

    • ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 10-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. .
    • மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 10-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலை வர் கருணாநிதி தலை மையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி சங்கர், பேரூராட்சி இள நிலை உதவியாளர் ஜெய சேகர், துப்புரவு மேற்பா ர்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குண சேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பொது சுகா தாரப் பணிகளான மழை நீர் வடிகால்கள் தூர்வாருதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • பொத்தனூர் பேரூராட்சியில் சிறப்பு ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 7 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் சிறப்பு ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 7 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர் துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம்,வார்டு உறுப்பினர்,தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    இதையொட்டி பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 3-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 3-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர் துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    முகாமில் பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

    இதில் மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    • நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
    • சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.

    செம்பட்டி:

    சித்தையன்கோட்டை பேரூராட்சி அனைத்து வார்டு பகுதியில், ஒட்டு மொத்த தூய்மை பணி முகாம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மேலும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், அப்துல் கரீம், இளநிலை உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.

    • நத்தம் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • நடை பயிற்சி செல்வோரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது நல்லாகுளம். இங்கு 4 பக்க கரைகளிலும் செடி, கொடிகள் மண்டிப்போய் நடைபயிற்சி செல்வோருக்கு இடையூறாக இருந்தது.

    இதை அகற்றும்படி பேரூராட்சிக்கு பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களை வைத்து செடி, கொடிகள் அகற்றபட்டது.

    நடந்து முடிந்த இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, செயல் அலுவலர் சரவணக்குமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விமேரி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு நடை பயிற்சி செல்வோரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    ×