என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
பொத்தனூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்
- பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
- முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.






