search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cholavaram"

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் மற்றும் கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

    சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    சோழவரம் அருகே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பணத்தை பறிகொடுத்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ‘ஜெர்சி’ என்ற பால் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் உள்ள கடைகளுக்கு அனுப்பி விற்கப்பட்டு வருகிறது.

    பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு ஏற்ப தினந்தோறும் பணத்தை ஒரக்காடு கம்பெனிக்கு அனுப்பிவைப்பார்கள். இந்த பணத்தை மொத்தமாக சேர்த்து தினமும் சென்னை கிண்டியில் உள்ள வங்கி கிளையில் செலுத்துவார்கள். பால் கம்பெனியில் இருந்து தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணம் எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

    தனியார் ஏஜென்சியின் காரை தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். இதில் துப்பாக்கி ஏந்திய ஒப்பந்த காவலர் திருத்தணியை சேர்ந்த லோகநாதன் (52) பாதுகாப்புக்காக வருவார். பணத்தை கொண்டு செல்வதற்கான பணியில் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேட்டை சேர்ந்த ஏஜென்ட் ராஜ்குமார் (27), அம்பத்தூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த காசாளர் பாலாஜி (42) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த 4 பேரும் நேற்று மாலை வழக்கம்போல ஒரக்காடு பால் கம்பெனிக்கு வந்து நிர்வாகத்திடம் இருந்து வசூலான ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு ஒரு பெட்டியில் வைத்து காரில் எடுத்துச் சென்றனர். இந்த கார் பணத்துடன் கம்பெனியில் இருந்து 500 மீட்டர் தூரம் சென்றவுடன் 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் கொண்ட கும்பல் வந்து காரை வழிமறித்தது.

    அந்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டார். உடனே அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்த ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவலறிந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் விசாரணை செய்த பின்னர், கார் டிரைவர் பாலசுப்பிரமணி, பாதுகாவலர் லோகநாதன், ஏஜென்ட் ராஜ்குமார், காசாளர் பாலாஜி ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, பொன்னேரி துணை சூப்பிரண்டு ராஜா ஆகியோர் சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து 4 பேரிடமும் சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் சோழவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோழவரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொன்னேரி:

    சோழவரத்தை அடுத்த எடப்பாளையம், பழைய விமான நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரத்தில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் சென்னையை சேர்ந்த சிவா, தினேஷ், ஆனந்த் குமார், விஜயகுமார், விஜய் என்பது தெரிய வந்தது.

    சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    ×