search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை- சோழவரம், மாதவரத்தில் 12 செமீ
    X

    விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை- சோழவரம், மாதவரத்தில் 12 செமீ

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் மற்றும் கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

    சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    Next Story
    ×