search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bicycle theft"

    • பள்ளி மாணவர் உள்பட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார்.

    கோவை,

    கோவை ரத்தின புரியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 44). இவர் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வரு கிறார். பள்ளிக்கு அவர் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல அவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார்.அப்போது சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து பால கிருஷ்ணன் வெளியே வந்து பார்த்த போது சைக்கிளை காண வில்லை. உடனே அவர் தனது மகளிடம் கேட்டார். அதற்கு அவர் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியதாக கூறினார். சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்க வில்லை.

    பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுவன், சங்கனூரை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் திருடி சென்ற சைக்கிளையும் மீட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் வண்டியிலே வைத்துவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 52). இவர் அணியாபுரத்தில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி தனது கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் வண்டியிலே வைத்துவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை.

    இது குறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் மோகனூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை மோகனூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் பெரியார் நகரைச்சேர்ந்த சுரேஷ்குமார் மகன் அகிலன் (22), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனாம்புலியூர், முதலைப் பட்டியை சேர்ந்த வைரபெருமாள் மகன் செல்வராஜ் (32) என்பதும் தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அணியாபுரத்தில் திருடிய ஸ்கூட்டர், மோகனூர் அடுத்த கிராயூர் அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவரது ஸ்கூட்டர் ஆகிய 2 வாகனங்களை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வராஜ் மற்றும் அகிலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    இளம்பெண் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் சில தினங்களுக்கு பின்னர் அதனை ஓட்டிச்சென்றபோது கைது செய்யப்பட்டார். பறிகொடுத்த பெண்ணே அவரை மடக்கினார்.
    சிவகாசி:

    சிவகாசியில் நடந்துள்ள இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

    திருத்தங்கல்– பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி இனியவள் (வயது 26). இவர் தனது சைக்கிளை கடந்த 12–ந்தேதி அங்குள்ள மாரியம்மன்கோவில் அருகில் நிறுத்தி விட்டு சென்று இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது சைக்கிளை காணவில்லை. யாரோ அதனை திடுடிச்சென்று விட்டனர்.

    இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிவகாசி காமராஜர் சிலை அருகில் இனியவள் நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். இதைப்பார்த்த இனியவள் அது தனது சைக்கிள் என்பதை கண்டுகொண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் துரிதமாக செயல்பட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்களது உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் முருகன் காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மாடசாமி (28) என தெரியவந்தது. சைக்கிளை திருடியதாக அவரை போலீசார் கைது செய்து சைக்கிளை மீட்டனர். திருடுபோன சில தினங்களிலேயே சைக்கிள் கிடைத்ததால் இனியவள் மகிழ்ச்சி அடைந்தார்.
    ×