search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bandipora"

    ஜம்மு காஷ்மீரின் பன்டிப்போராவில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் தனது இன்னுயிரை இழந்தார். #Bandiporaencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஷிவகுமார் தனது இன்னுயிரை இழந்து வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Bandiporaencounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். #JammuKashmir #Firng
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாண்டிபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. #JammuKashmir #Firng
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோராவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் ஹஜ்ஜன் காவல் நிலையம் அருகில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது

    இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்த ராணுவ முகாம் மீது கையெறி குண்டுகளை வீசினர். அதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×