search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempt robbery"

    • தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார்
    • 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம் ஜவகர்(வயது 57). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    நகை திருட்டு

    தீபாவளி பண்டிகை யையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக ராம் ஜவகர் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாளை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் ராஜ் (55). இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அங்கு நகை, பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருச்சி விமான நிலைய பகுதியில் அமைந்துள்ள ஜவுளி வியாபாரிகள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
    • ஏர்போர்ட் பகுதியில் கடந்த இரு தினங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ைளயில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் அன்பு நகர் பகுதியில் வசித்து வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் நிதிஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையும் ஒரு கிலோ வெள்ளி நகைகளும் கொள்ளை போனது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.

    திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தனது வீட்டை சென்னையைச் சேர்ந்த துணி வியாபாரிகளான கபீர் (வயது 30) மற்றும் மீரான் (32) ஆகிய இருவருக்கும் வாடகைக்கு விட்டிருந்தார்.

    இதற்கிடையே கபீர் மற்றும் மீரான் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இருவரும் மொத்தமாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    இவர்களிடம் பணிபுரிபவர்களாக சுமார் நான்கு முதல் ஐந்து நபர்கள் அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    சென்னை சென்றிருந்த இருவரும் திரும்பி வந்தபோது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. பின்னர் அவர்கள் இதுபற்றி உடனடியாக ஏர்போர்ட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏர்போர்ட் போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த துணிகள் சிதறி கிடப்பதை கண்டனர்.

    ஆனால் இந்த வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என தெரிய வந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏர்போர்ட் பகுதியில் கடந்த இரு தினங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ைளயில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பிரான்ஸ் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம்  இருந்து இந்திய அரசு 59 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்கிறது.

    உரிய காலத்துக்குள் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும் பணிகளை கண்காணிக்கவும், இந்த போர் விமானங்களை பராமரிப்பது மற்றும் ஓட்டுவதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் இந்திய விமானப்படை சார்பில் தற்காலிக அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.

    பாரிஸ் அருகே செயின்ட் கிலவுட்ஸ் பகுதியில் டசால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் விமானப்படை கேப்டன் அந்தஸ்த்திலான ஒரு அதிகாரி தலைமையில் இந்திய விமானப்படையை சேர்ந்த சிலர் இங்கு தங்கியுள்ளனர்.



    இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து சில மர்மநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை முயற்சியாக கருதப்படும் இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த கணினி தகவல்கள் உள்ளிட்ட ஏதும் களவாடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
    ×